ஆப்நகரம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மண்டல பூஜை.!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மண்டல பூஜை நடைபெறுவதை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

TNN 26 Dec 2017, 10:38 am
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மண்டல பூஜை நடைபெறுவதை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Samayam Tamil mandala pooja in sabari mala temple
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மண்டல பூஜை.!


சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 15-ம் தேதி நடை திறக்கப்பட்டு, 16-ம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு முறை நடைதிறக்கப்பட்டு, 41 வது நாளில் மண்டல பூஜை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று மண்டல பூஜை நடைபெற இருக்கிறது. மண்டல பூஜை நடைபெறும் நாளில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவதும் வழக்கம்.

கடந்த 22-ம் தேதி, ஆறான்முனாவில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட தங்க அங்கி இன்று மாலை 5.30 மணிக்கு சந்நிதானத்தை வந்தடையும். பின்னர், மாலை 6.30 மணிக்கு ஐயப்பன் விக்ரகத்தில் தங்க அங்கி சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

இன்று பூஜை முடிந்தவுடன் நடை சாத்தப்படுவதால், 41 நாட்கள் மண்டல பூஜை முடிவிற்கு வரும். இதனை அடுத்து மகர விளக்கு பூஜைகளுக்காக வரும் 30ந் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்