ஆப்நகரம்

பிறவி மருந்தீசர் கோயிலில் சித்திரை விழா அமர்க்களம்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் அமைந்து உள்ளது ஸ்ரீபிறவி மருந்தீசர் கோயில். ஞானசம்பந்தரால் தேவாரம் பாடிய அற்புதமான திருத்தலம் இது

TNN 19 Apr 2016, 6:22 pm
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் அமைந்து உள்ளது ஸ்ரீபிறவி மருந்தீசர் கோயில். ஞானசம்பந்தரால் தேவாரம் பாடிய அற்புதமான திருத்தலம் இது.
Samayam Tamil maruntheesar temple chitra festival jubliation
பிறவி மருந்தீசர் கோயிலில் சித்திரை விழா அமர்க்களம்



வருடம் முழுவதும் பல விழாக்கள் இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படும் என்றாலும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

கடந்த 4ம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதையடுத்து ஸ்ரீவிநாயகர் உத்ஸவமும் ஸ்ரீசுப்ரமண்யர் உத்ஸவமும் நடைபெற்றது.

பிறகு, அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்பந்தர் என நால்வர் திருவீதியுலா பவனி நிகழ்ச்சியும் அதையடுத்த நாளில், புஷ்ப விமானத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடு ஆகியவை சிறப்புற நடைபெற்றது.

இதன் பிறகு, ஸ்ரீசந்திரசேகர சுவாமிக்கு அதிகார பட்டம் கட்டுதல், புஷ்பப் பல்லக்கு, வசந்த திருவிழா, இந்திர விமானம் மற்றும் பூத வாகனங்களில் சுவாமியும் அம்பாளும் புறப்பாடு என நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் யானை வாகனம், வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்நிலையில், நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று, விநாயகர், ஸ்ரீமுருகன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் முன்செல்ல தீர்த்தவிடங்க தியாகராஜர் எழுந்தருளிய பெரிய தேர் ஆகியவை புறப்பட்டு வீதியுலா வந்தன. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இரவு தேர் நிலைக்கு வந்ததும் சிறப்பு பூஜைகள் நடந்தது.


இன்று பிரதோஷ நாள் என்பதால், காலையில் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் நடைபெற்றன. அதன்பிறகு சுவாமி, அம்பாள் புறப்பாடு நடைபெற்றன. மாலையில் பிரதோஷ பூஜைக்கு பிறகு, சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்