ஆப்நகரம்

கேரளாவில் கோயிலை பாதுகாக்கும் சைவ முதலை!!

கேரளாவில் ஏரிக்குள் இருக்கும் ஆனந்தபுரா கோயிலை முதலை பாதுகாத்து வரும் சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 7 Oct 2017, 6:14 pm
கேரளாவில் ஏரிக்குள் இருக்கும் ஆனந்தபுரா கோயிலை முதலை பாதுகாத்து வரும் சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil meet babiya the vegetarian crocodile who guards a temple in kerala
கேரளாவில் கோயிலை பாதுகாக்கும் சைவ முதலை!!


இந்தியா கோயில்களுக்கு பிரசித்தி பெற்றது. அதிலும் கேரளா கோயில்கள் குறிப்பிடத்தக்க சிறப்புக்களை பெற்று விளங்குகின்றன. கேரளாவில் ஆனந்தபுராவில் உள்ள ஏரி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலை பாபியா என்ற முதலைதான் பாதுகாத்து வருகிறது என்ற செய்தி நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

இது மட்டுமல்ல கோயில் பிரசாதத்தை மட்டுமே பாபியா சாப்பிடும். முழுக்க சைவம்தான். கோயிலில் இருந்து பிரசாதமாக வழக்கப்படும் அரிசி உணவு, வெல்லம் ஆகியவற்றை மட்டுமே சாப்பிடும். ஏரியில் இருக்கும் மீனுக்கு எந்த கெடுதலும் தராது. இந்த சைவ பாபியா முதலை கடந்த 60 ஆண்டுகளாக இந்தக் கோயிலை பாதுகாத்து வருகிறது.

இதுகுறித்து கோயில் டிரஸ்டி ஒருவர் கூறுகையில், ''மதிய பூஜைக்குப் பின்னர் பக்தர்கள் தரும் பிரசாதம் உணவாக பாபியாவுக்கு வழங்கப்படும். எப்படி யானைக்கு கையால் ஊட்டுகிறோமோ அதேபோல், முதலைக்கும் ஊட்டுவோம்'' என்கிறார்.

மற்றொருவர் இந்தக் கோயில் சிறப்பு பற்றி கூறுகையில், ''கடவுள் விஷ்ணுவின் பக்தரான வில்வமங்களத்து சுவாமி என்பவர் தவம் மேற்கொண்டு இருந்தார். அப்போது, வில்வமங்களத்து சுவாமியின் தவத்தைக் கலைப்பதற்காக குழந்தையாக அவதரித்து வந்த கிருஷ்ணர், அவருக்கு தொந்திரவு கொடுத்துள்ளார். அப்போது கிருஷ்ணரை சுவாமிகள் தள்ளியுள்ளார். அந்த இடத்தில் இருந்து திடீரென மறைந்த கிருஷ்ணர் அங்குள்ள பொந்தில் கடவுளாக மறைந்துள்ளார். அந்த நுழைவு வாயிலைத்தான் முதலை பாதுகாத்து வருகிறது'' என்கிறார்.

மற்றொரு செய்தியாக இப்படியும் கூறப்படுகிறது. ''கடந்த 1945ஆம் ஆண்டில் இந்த ஏரியில் இருந்த முதலையை பிரிட்டனைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொன்று விட்டார் என்றும், இதைத் தொடர்ந்து சில நாட்களில் அந்த ராணுவ வீரர் பாம்பு கடித்து இறந்தார் என்றும் கூறப்படுவது உண்டு. இதற்குப் பின்னர் ஏரியில் ஒரு முதலை இறந்தாலும், மற்றொரு முதலை தானாக உருவாகும். இது இந்தக் கோயிலின் சிறப்பு.

மேலும் நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால்தான் இந்த முதலையும் நமது கண்களுக்கு தென்படும்.

Babiya, a crocodile who guards the famous Ananthapura Lake Temple in Kerala.

அடுத்த செய்தி

டிரெண்டிங்