ஆப்நகரம்

முருகன் கோயில்களில் ஆடிச் செவ்வாய் வழிபாடு!

ஆடிச் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, இன்று முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. லட்சக்கணக்கான பக்தர்கள் முருகக் கடவுளுக்கு பாலபிஷேகம் செய்து, தரிசித்து வழிபட்டார்கள்.

TOI Contributor 2 Aug 2016, 5:40 pm
ஆடிச் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, இன்று முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. லட்சக்கணக்கான பக்தர்கள் முருகக் கடவுளுக்கு பாலபிஷேகம் செய்து, தரிசித்து வழிபட்டார்கள்.
Samayam Tamil murugan temple aadi seyvaay vazhipaadu
முருகன் கோயில்களில் ஆடிச் செவ்வாய் வழிபாடு!


செவ்வாய்க்கிழமை கந்தனுக்கு உரிய நன்னாள். அதிலும் ஆடி மாத செவ்வாயில் வழிபட்டால், வழக்குகளில் உள்ள பிரச்னை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். கல்வி கேள்விகளில் மாணவர்கள் சிறந்து விளங்கலாம். வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும் என்பது ஐதீகம்.

எனவே, சென்னை வடபழநி முருகன் கோயில், பாரிமுனை கந்தகோட்டம், காஞ்சிபுரம் குமரகோட்டம், தேனாம்பேட்டை முருகன் கோயில், சைதாபேட்டை முருகன் கோயில், நங்கநல்லூர் திருமால் மருகன் திருக்கோயில், வல்லக்கோட்டை, திருத்தணி, சிறுவாபுரி, குரோம்பேட்டை குமரன்குன்றம் என முருகப்பெருமான் கோலோச்சும் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடந்தன.

இதேபோல் திருச்சி வயலூர் முருகன் கோயில், ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோயில், விராலிமலை முருகன் கோயில், தஞ்சாவூர் சுப்ரமணிய சுவாமி கோயில், சுவாமிமலை முருகன் கோயில், திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில், பழநி தண்டாயுதபாணி ஆலயம், பழமுதிர்ச்சோலை முருகன் கோயில், திருப்பரங்குன்றம் திருத்தலம் முதலான முருகன் கோயில்கள் அனைத்திலும் சிறப்பு அபிஷேகங்களும் விசேஷ ஆராதனைகளும் நடைபெற்றன.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து பிரார்த்தனை செய்து கொண்டார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்