ஆப்நகரம்

தசாவதாரங்களில் தலைசிறந்தது நரசிம்ம அவதாரம்!

பகவான் விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மிக உயர்ந்தது நரசிம்ம அவதாரமாகும்.

TOI Contributor 16 Feb 2017, 10:10 pm
பகவான் விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மிக உயர்ந்தது நரசிம்ம அவதாரமாகும்.
Samayam Tamil narasimha the all time best of vishnus dasavatara
தசாவதாரங்களில் தலைசிறந்தது நரசிம்ம அவதாரம்!


ஏனெனில், ஒரு பக்தனின் சொல்லைக் காப்பாற்றவே, விஷ்ணு இந்த அவதாரத்தை நிகழ்த்தினார். மனிதனுக்கு வாக்கு சுத்தம் மிக முக்கியம். ஒன்றைச் சொன்னால், அதைச் செய்தாக வேண்டும். வாக்கு தவறினால் அவனுக்கு மதிப்பு போய்விடும்.

இதன் அடிப்படையில்தான், பிரகலாதனின் வார்த்தையை காப்பாற்ற தூணை உடைத்துக் கொண்டு வெளிப்பட்டார் நரசிம்மன்.

''அடேய் பிரகலாதா! எங்கேயடா இருக்கிறான் உன் விஷ்ணு?,’’ என்று கேட்கிறான் இரண்யன்.

''தந்தையே! அவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான். எல்லாப் பொருள்களிலும் நிறைந்திருக்கின்றான்,’’ எனச் சொல்ல இந்த தூணில் இருக்கிறானா, என இரண்யன் தூணை உடைக்க நிகழ்ந்ததே நரசிம்ம அவதாரம்.

வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில், (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். .

சுவாதி நட்சத்திரத்தன்று அவரை வழிபடுவது நல்ல பலனை தரும்.

தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள்.

நரசிம்ம அவதாரம் விஷ்ணு மனித உடலும் சிங்கத்தலையும் கொண்ட அவதாரமாக உள்ளது.
தூணிலிருந்து வெளிப்பட்ட அந்தக் கருணைக்கடல், இரணிய வதத்தை முடித்த பிறகு, பிரகலாதனிடம், ''நீ ஏன் தூணைக் காட்டினாய், துரும்பைக் காட்டியிருக்கக் கூடாதா?,’’ என்றானாம்.

''ஏன் இப்படி சொல்கிறீர்கள்?,’’ என்ற பிரகலாதனிடம், ‘’தூண் என்பதால், இரணியன் அதை உடைக்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. துரும்பு என்றால் அதைக் கிள்ளியெறிந்தவுடன் பிரசன்னமாகி இருப்பேனே,’’ என்றாராம்.

நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை. அவரிடம் வைக்கும் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேறும் என்பதே ஐதீகம்…

Narasimha- the all time best of Vishnu’s Dasavatara.

அடுத்த செய்தி

டிரெண்டிங்