ஆப்நகரம்

நவராத்திரி ஸ்பெஷல்: மகிஷன் மீது நின்றபடி... மக்களைக் காக்கும் துர்கை!

காஞ்சிபுரத்தை நகரேஷூ காஞ்சி என்று போற்றுகிறது புராணம். அதாவது, நகரங்களில் சிறந்தது காஞ்சி நகரம் என்று அர்த்தம். எந்தத் தெருவில் நுழைந்து, எந்தத் தெருவுக்குள் நுழைந்தாலும் அங்கே கோயில் இருக்கும்!

TOI Contributor 1 Oct 2016, 4:47 pm
காஞ்சிபுரத்தை நகரேஷூ காஞ்சி என்று போற்றுகிறது புராணம். அதாவது, நகரங்களில் சிறந்தது காஞ்சி நகரம் என்று அர்த்தம். எந்தத் தெருவில் நுழைந்து, எந்தத் தெருவுக்குள் நுழைந்தாலும் அங்கே கோயில் இருக்கும்!
Samayam Tamil navratri special durga standing on makisan to protect civilians
நவராத்திரி ஸ்பெஷல்: மகிஷன் மீது நின்றபடி... மக்களைக் காக்கும் துர்கை!


இங்கே, கருக்கினில் அமர்ந்தாள் கோயில் வெகு பிரசித்தம். இந்தக் கோயிலில் உள்ள மேற்புற தேவ கோஷ்டத்தில் ஸ்ரீதுர்கை, மகிஷன் மீது நின்று கொண்டு, திருக்கரங்களில் சங்கு- சக்கரம் ஏந்தியபடி, அபய- வரதம் முத்திரைகளைக் காட்டி அருளும் நிலையில், கம்பீரமாகக் காட்சி தருகிறாள் ஸ்ரீதுர்கை.

நவராத்திரி காலங்களில், ஸ்ரீதுர்கைக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. காலையும் மாலையும் விசேஷ அலங்காரத்தில் காட்சி தரும் ஸ்ரீதுர்கையை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமை ராகுகாலவேளையிலும் நவராத்திரியிலும் ஸ்ரீதுர்கைக்கு புடவை சார்த்தி வணங்கினால், வாழ்வில் எல்லா துக்கங்களும் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் விரைவில் நிகழும்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்