ஆப்நகரம்

நவராத்திரி ஸ்பெஷல்: சுருட்டபள்ளியில்... பிடாரி மீது ஸ்ரீதுர்கை!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டைக்கு அருகில் உள்ளது சுருட்டப்பள்ளி. எல்லா கோயில்களிலும் சிவபெருமான், லிங்க வடிவில் காட்சி தருவார். ஆனால் சுருட்டப்பள்ளி திருத்தலத்தில், பெருமாளைப் போல, ஸ்ரீரங்கநாதரைப் போல பள்ளி கொண்ட நிலையில் காட்சி தருகிறார். வேறு எந்தத் தலத்திலும் இப்படியொரு காட்சியைத் தரிசிக்க முடியாது.

TOI Contributor 1 Oct 2016, 4:39 pm
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டைக்கு அருகில் உள்ளது சுருட்டப்பள்ளி. எல்லா கோயில்களிலும் சிவபெருமான், லிங்க வடிவில் காட்சி தருவார். ஆனால் சுருட்டப்பள்ளி திருத்தலத்தில், பெருமாளைப் போல, ஸ்ரீரங்கநாதரைப் போல பள்ளி கொண்ட நிலையில் காட்சி தருகிறார். வேறு எந்தத் தலத்திலும் இப்படியொரு காட்சியைத் தரிசிக்க முடியாது.
Samayam Tamil navratri special suruttapalli sridurgai on pitari
நவராத்திரி ஸ்பெஷல்: சுருட்டபள்ளியில்... பிடாரி மீது ஸ்ரீதுர்கை!


இந்தத் தலத்தில் இன்னொரு ஆச்சரியம். இங்கே உள்ள ஸ்ரீதுர்கை விசேஷமானவள். பிடாரியின் மீது நின்றபடி திருக்காட்சி தந்தருள்கிறாள்.

ராகுகாலத்தில், ஸ்ரீதுர்கையை தரிசித்து வேண்டுவதற்காகவே தமிழகம் மற்றும் ஆந்திரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர்.

அதேபோல், நவராத்திரி விழாவின் போதும், ஸ்ரீதுர்கைக்கு தினமும் அபிஷேக அலங்காரங்களும் விசேஷ பூஜை மற்றும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. அப்போது இவளுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து, எலுமிச்சை தீபமேற்றி, எலுமிச்சை சாதம் நைவேத்தியம் படைத்து, வேண்டிக் கொண்டால், துன்பங்கள் யாவும் விலகிவிடும். கஷ்டங்கள் அனைத்தும் காணாது போகும். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்