ஆப்நகரம்

திருப்பதியில் 5 நாட்கள் சுவாமி தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அஷ்டபந்தன பாலாலய மஹாசம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு 5 நாட்கள் தரிசன சேவை ரத்து செய்யப்படுகிறது.

TOI Tech 5 Jul 2018, 3:11 pm
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அஷ்டபந்தன பாலாலய மஹாசம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு 5 நாட்கள் தரிசன சேவை ரத்து செய்யப்படுகிறது.
Samayam Tamil maxresdefault


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அஷ்டபந்தன பாலாலய மஹாசம்ப்ரோக்ஷணம் நடைபெறும். இது வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனால், ஏற்கெனவே வரும் ஆகஸ்ட் 12 முதல் 16 வரை ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் அந்த நாட்களில் தரிசன சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆகஸ்ட் 15ஆம் தேதி மஹாசாந்தி திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

மேலும், ஜூலை 20ஆம் தேதி முதல் அஷ்டபந்தன பாலாலய மஹாசம்ப்ரோக்ஷணத்திற்காக பரகாமணி சேவை கல்யாண மண்டபத்தில் வைத்து மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அஷ்டபந்தன பாலாலய மஹாசம்ப்ரோக்ஷணத்திற்கான ஏற்பாடுகள் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் முடிவடையும். ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் கோயிலில் பணி புரிபவர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்