ஆப்நகரம்

சிவகங்கை அருகே பழமையான சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம், மேலப்பூங்குடி, வெள்ளிமலை அடிவாரத்தில் 10ம் நூற்றாண்டு பழமையான சோழர் கால சிவன் கோயில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

TNN 6 Jun 2017, 6:57 pm
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மேலப்பூங்குடி, வெள்ளிமலை அடிவாரத்தில் 10ம் நூற்றாண்டு பழமையான சோழர் கால சிவன் கோயில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil old lord shiva temple find out in sivagangai
சிவகங்கை அருகே பழமையான சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு!


வெள்ளிமலை அடிவாரத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள சிவன் கோயில் சிதைந்த நிலையில் உள்ளது. இங்கு லிங்கம் இல்லாத பீடம், தலை இல்லாத அக்னி பகவான் சிலை, நந்தி போன்றவை சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கு மக்கள் வாழ்ந்ததற்கான தடையங்களாக பானை ஓடுகள் பரவி கிடக்கின்றன. அதோடு பெரிய கல் தொட்டியும், ஸ்ரீதேவி சிலையும் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 10ம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் முகமதியர்கள் படையெடுப்பால் அழிக்கப்பட்டதற்கான ஆதரங்கள் கிடைத்துள்ளன.



இக்கோயிலுக்கு 3 கிமீ சுற்றளவில் நிலம் இருந்துள்ளது. அதோடு தங்க தேரோட்டம் நடந்துள்ளது. அந்த பகுதியை ஆண்ட வல்லானை கிபி 1342ல் மதுரை சுல்தால் சூழ்ச்சியால் கொலை செய்து, அங்குள்ள செல்வத்தை கொள்ளையடிக்க நினைத்தான். ஆனால் எந்த பொருட்களும் கிடைக்காததால், கோயிலை சூறையாடி, தேரை, கல் தொட்டி அருகே புதைத்துள்ளார்.
இப்பகுதியை ஆய்வு செய்தால் தமிழனின் பழங்கால நாகரீக வரலாறு வெளிச்சத்துக்கு வரும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்