ஆப்நகரம்

மயிலாடுதுறையில் காவிரி புஷ்கரத்தை முன்னிட்டு ஒரு லட்சம் பக்தர்கள் நீராடல்

காவிரி புஷ்கர விழாவை முன்னிட்டு, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், நேற்று வரை சுமார் 1 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

TNN 17 Sep 2017, 3:24 pm
காவிரி புஷ்கர விழாவை முன்னிட்டு, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், நேற்று வரை சுமார் 1 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil one lakh devotees are watering in the mayiladuthurai cauvery pushkar festival
மயிலாடுதுறையில் காவிரி புஷ்கரத்தை முன்னிட்டு ஒரு லட்சம் பக்தர்கள் நீராடல்


144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காவிரி புஷ்கரம் திருவிழா, செப்டம்பர் 12 முதல் 24ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவின் போது பக்தர்கள் காவிரி நதியில் புனித நீராடினால் கங்கையில் குளித்த பயனை அடைவர் என்பது ஐதீகம்.

காவிரி மகாபுஷ்கர விழாவில், புனித நீராடுவதற்காகவே, மேட்டூர் அணையில் இருந்து 10,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விழா தொடங்கிய 12-ம் தேதி முதல் நேற்று வரை சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர். மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

One lakh devotees are watering in the Mayiladuthurai Cauvery Pushkar festival

அடுத்த செய்தி

டிரெண்டிங்