ஆப்நகரம்

70 ஆண்டுகளுக்குப் பின் ஊஞ்சலில் சுவாமி சக்கரபாணி!

கும்பகோணம் சக்கரபாணி கோயிலில் 70 ஆண்டுகளுக்குப் பின் ஊஞ்சல் உற்சவம் தொடங்கியுள்ளது.

TNN 1 Jan 2018, 3:10 am
கும்பகோணம் சக்கரபாணி கோயிலில் 70 ஆண்டுகளுக்குப் பின் ஊஞ்சல் உற்சவம் தொடங்கியுள்ளது.
Samayam Tamil oonjal urchavam in chakrapani temple after 70 years
70 ஆண்டுகளுக்குப் பின் ஊஞ்சலில் சுவாமி சக்கரபாணி!


கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலமாகும். இக்கோயிலில் அருள் பாலிக்கும் சக்கரபாணி சுவாமியை சூரியன், பிரம்மன், மார்கண்டேயன், அகிர்புதன்ய மகரிஷி, அக்னிபகவான் போன்றவர்கள் வழிபட்டுள்ளனர்.

இக்கோயிலில் உள்ள செவ்வரளி, செம்பருத்தி, வில்வம், வன்னி, துளசி மற்றும் குங்குமம் ஆகியவற்றைக் கொண்டு சுவாமிக்கு அர்ச்சனை நடைபெறும். இக்கோயிலில் மார்கழி மாதம் தோறும் நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஆனால், 70 ஆண்டுகளாக இந்த ஊஞ்சல் உற்சவம் தடைபட்டிருந்தது. இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை முதல் ஊஞ்சல் உற்சவம் மீண்டும் தொடங்கியுள்ளது. மாலை ஸ்ரீவிஜயவல்லி ஸ்ரீ சுதர்சன வல்லி தாயாருடன் சக்கரபாணி சுவாமி உள் வீதி புறப்பாடு செய்தார். பின், படியேற்ற சேவையும் ஊஞ்சல் உற்சவ ஆராதனையும் நிகழ்ந்தன. தொடர்ந்து, நாமசங்கீர்த்தனமும் நடைபெற்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்