ஆப்நகரம்

சூரியபிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி

சூரியபிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனிருச்சானூர் கோயில் பிரம்மோற்ஸவ விழாவின் 7ம் நாளான இன்று காலை சூரியபிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் 4 மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார்.

TNN 21 Nov 2017, 5:14 pm
விழாவின் 7ம் நாளான இன்று காலை சூரியபிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் 4 மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார்.
Samayam Tamil padmavati goddess comes in his wagon festival
சூரியபிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி


அலர்மேலு மங்கை என்றும் பத்மாவதி தாயார் என்றும் பக்தர்கள் அன்புடன் அழைக்கும் தாயார் குடிகொண்டுள்ள திருச்சானூர் கோயில் பிரம்மோற்ஸவம் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
வரும் 23ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்ஸவ விழாவில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநில பக்தர்கள் பங்கேற்று தாயாரை தரிசித்து வருகின்றனர்.

இதில் தினமும் காலை, இரவு ஆகிய இரண்டு வேளைகளிலும் தாயார் ஒவ்வொரு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இந்நிலையில், 7ம் நாளான இன்று காலை, பத்மாவதி தாயார் சூரியபிரபை வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

வாகன சேவையின் முன், பல மாநில நடனக் கலைஞர்கள் நடனமாடியபடி சென்றது அனைவரையும் கவர்ந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்