ஆப்நகரம்

மஹாளய அமாவாசை: முன்னோர் ஆசிபெறும் நன்னாள்

நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிக உகந்த நாளான மஹாளய அமாவாசை இன்றும் நாளையும் கடைபிடிக்கப்படுகிறது.

TNN 19 Sep 2017, 10:57 am
நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிக உகந்த நாளான மஹாளய அமாவாசை இன்றும் நாளையும் கடைபிடிக்கப்படுகிறது.
Samayam Tamil pitra visarjan 2017 shradh puja vidhi and timings significance
மஹாளய அமாவாசை: முன்னோர் ஆசிபெறும் நன்னாள்


ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மஹாளய அமாவாசை, தை அமாவாசை ஆகியவை முன்னோர்களுக்கு கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நாள்கள். ஒவ்வொரு ஆண்டும் சிராத்தம் செய்பவர்கள் கூட இந்த நாட்களில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆசி பெறுவதால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டுக்கான மஹாளய அமாவாசை இன்று மதியம் முதல் நாளை மதியம் வரை இருக்கும். இன்றே மஹாளய அமாவாசை தொடங்கினாலும், நாளை அதிகாலை 5.32 மணி முதல் மதியம் 12 மணிக்குள் எப்போது வேண்டுமானாலும் தர்ப்பணம் கொடுக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்