ஆப்நகரம்

துபாயின் முதல் இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டினாா் பிரதமா் மோடி

பிரதமா் நரேந்திர மோடி இன்று அபுதாபியில் முதல் இந்து கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினாா்.

Samayam Tamil 11 Feb 2018, 2:26 pm
பிரதமா் நரேந்திர மோடி இன்று அபுதாபியில் முதல் இந்து கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினாா்.
Samayam Tamil pm launches 1st hindu temple project addresses indian in uae
துபாயின் முதல் இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டினாா் பிரதமா் மோடி


2015-ம் ஆண்டு பிரதமர் மோடி துபாய் சென்றிருந்தபோது, அங்குள்ள இந்துக்களின் வழிபாட்டுக்காகக் கோவில் கட்ட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்ததை தொடர்ந்து அதற்கு அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் கோவிலின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுவாமிநாராயண் அமைப்பிற்கு 25 ஆயிரம் சதுரஅடி நிலத்தை ஐக்கிய அமீரக அரசு வழங்கியது.


இந்தநிலையில் ஜோர்டான், பாலஸ்தீனம் நாடுகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அபுதாபி இளவரசர் அல் நெஹாயானுடன் ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளிடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

மேலும் இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் இன்று நடைபெற்ற இந்து கோவிலின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று கோவிலின் கட்டுமான பணிகளை தொடங்கிவைத்தாா். அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்துக் கோவில் இது என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்