ஆப்நகரம்

அமாவாசை பூஜை விதிகள் எளிமையாக படையல் வைப்பது எப்படி?

அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதோடு, அவர்களுக்கு படையல் இடுவது வழக்கம். எப்படி எளிமையான முறையல் படையல் வைப்பது என்பதை பாப்போம்...

Samayam Tamil 29 Aug 2019, 3:04 pm
அமாவாசை தினம் என்றாலே நம் ஞாபகத்திற்கு வருவது முன்னோர்களுக்கு தர்ப்பணம், படையல் கொடுக்க வேண்டிய விஷயங்கள் தான்.
Samayam Tamil Amavasya Padayal


அந்த வகையில் அமாவாசை தினத்தில் எப்படி பூஜை செய்வது, என்னென்ன தேவை என்பதை இங்கு பார்ப்போம்.

அமாவாசை பூஜை பெரும்பாலான நாட்கள் பூஜையை தொடங்குவதற்கு முன்னர், பூஜை அறை மற்றும் மற்ற இடங்களில் கோலம் இடுவது வழக்கம். ஆனால் அமாவாசை தினத்தில் பூஜை செய்வதற்கு முன் கோலமிடுதல் கூடாது.

சுவாமி படங்களுக்கு மலர்களை சூட வேண்டும்.
வீட்டில் பூஜை அறையில் ஒற்றை விளக்கு ஏற்றக் கூடாது என்பதால், இரண்டு விளக்குகள் ஏற்றுவது நலன். அதனால் இரண்டு விளக்குகள் ஏற்றவும்.

முன்னோர்களுக்கு அமாவாசை தர்ப்பணம் கொடுக்க விரும்புபவர்கள் சுவாமியை கும்பிட்டு தர்ப்பணம் கொடுத்துவிட்டு, அவர்களுக்கு படையல் இடலாம்.
தேவையான பொருட்கள் :
பூக்கள்
வாழைப்பழம்
வெற்றிலை
பாக்கு
இனிப்பு (வெல்லம் வைக்கலாம்)

படையல் இடுவது எப்படி?
பச்சரியால் செய்யப்பட்ட சாதத்தில், புதிதாக வாங்கப்பட்ட தயிர் கலக்கவும்.
வெங்காயம் போடப்படாத வாழைக்காயால் செய்யப்பட்ட ஒரு உணவு வைக்கலாம்.
துளசி இலையை வைக்கவும்.
இதனுடன் அச்சு வெல்லம் சேர்க்கவும்.
இதில் அன்ன சுத்தி செய்யக்கூடிய நெய் மிகச் சிறிதளவு இடவும்.


வாழைப் பழங்களை பூஜைக்கு வைக்கும் போது கிள்ளி விட்டு வைக்கவும்.
வீட்டில் கர்ப்பிணி பெண்கள் இருந்தால் தேங்காய் உடைக்க வேண்டாம்.
படையலிட்ட பின்னர் சுவாமிக்கும், படையலிட்ட உணவுகளுக்கும் பூஜை செய்து முன்னோர்களுக்கு சமர்ப்பிக்கலாம்.

இதே மாதிரி உங்கள் வீட்டில் எளிமையாக அமாவாசை பூஜை படையல் செய்து வழிபடலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்