ஆப்நகரம்

மகா லட்சுமியின் அருள் பெற வெள்ளிக்கிழமைகளில் இதை செய்யுங்கள்!

இந்துக்கள் ஒவ்வொரு தினத்தை ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாகக் கருதுகின்றனர். அதன்படி வெள்ளிக்கிழமை மகா லட்சுமிக்கானதாக கருதுகின்றனர்.

ஒவ்வொரு வெள்ளி அன்று லட்சுமி தேவியை வணங்குவதோடு சில விஷயங்களைப் பின்பற்றினால் துன்பங்கள் விலகி அவரின் அருள் கிடைப்பதோடு, ஒருபோதும் பணமும் தானியமும் குறையாத அருளை வழங்குவார்.
அதே நேரத்தில், வீட்டின் பேராசை மற்றும் விரக்தியும் நீங்கும். இந்த 6 ஜோதிட விதிகளைப் பற்றி வந்தால் மகா லட்சுமியின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.

Samayam Tamil 30 Jul 2020, 6:44 pm
இந்துக்கள் ஒவ்வொரு தினத்தை ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாகக் கருதுகின்றனர். அதன்படி வெள்ளிக்கிழமை மகா லட்சுமிக்கானதாக கருதுகின்றனர்.
Samayam Tamil follow these 6 rules for dhanalakshmi worship on friday
மகா லட்சுமியின் அருள் பெற வெள்ளிக்கிழமைகளில் இதை செய்யுங்கள்!


ஒவ்வொரு வெள்ளி அன்று லட்சுமி தேவியை வணங்குவதோடு சில விஷயங்களைப் பின்பற்றினால் துன்பங்கள் விலகி அவரின் அருள் கிடைப்பதோடு, ஒருபோதும் பணமும் தானியமும் குறையாத அருளை வழங்குவார்.
அதே நேரத்தில், வீட்டின் பேராசை மற்றும் விரக்தியும் நீங்கும். இந்த 6 ஜோதிட விதிகளைப் பற்றி வந்தால் மகா லட்சுமியின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.

​இந்த விஷயத்தை சாப்பிட வேண்டாம்

ஜோதிடர்களின் கூற்றுப்படி, புளிப்பு சுவை கொண்ட பழங்கள், ஊறுகாய் போன்ற உணவு பொருட்களை வெள்ளிக்கிழமைகளில் சாப்பிடக்கூடாது. அதே சமயம் வெள்ளிக்கிழமை இனிப்பு சுவை கொண்ட பொருட்கள், பதார்த்தங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய நாள். மேலும், லட்சுமி தேவியை வணங்கும் போது புளிப்பு சுவை கொண்ட உணவை பிரசாதமாக படைக்கக் கூடாது.

​பணத்திற்கு பஞ்சமில்லை

வெள்ளிக்கிழமைகளில் தேன் கலந்த பாயாசம் படைத்து வணங்கி,குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அதே போல் கீரை படைத்து வணங்கி, பெண்களுக்கு வழங்கலாம். இதன் மூலம் பணப் பஞ்சம் தீரும்.

​கற்பூரம் காட்டுங்கள்

நாம் இறை வழிபாட்டின் போது கற்பூரத்தைக் காட்டுவது வழக்கம். அந்த வகையில் வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தேவிக்கு கற்பூரத்தை காட்டி வணங்கி முழு வீட்டிற்கும் காட்டுங்கள்.


இதைச் செய்வதன் மூலம், நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் வருவது மட்டுமல்லாமல், வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கும். இதன் மூலம் வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் பெற முடியும்.

இதை செய்ய வேண்டாம்

வெள்ளிக்கிழமை யாரும் மறந்தும் கடன் கொடுக்கக்கூடாது. வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்ட பணம் திரும்ப வருவது கடினம் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி அன்று கடன் கொடுப்பதால் உறவுகளிலும் கசப்பும், விரிசலும் ஏற்படக்கூடும்.

மயிலாடுதுறையில் வானத்தை முட்டும் அளவிற்கு உயரமான மற்றொரு அத்தி வரதர் பெருமாள்... தரிசிக்கலாம் வாங்க

​மகா லட்சுமி ஸ்தோத்திரம்

வெள்ளிக்கிழமை மாலை லட்சுமி ஸ்தோத்திரத்தை ஓதுவது சிறந்தது. மந்திரத்தை படிக்கும் போது வீட்டின் கதவை திறந்து வைத்திருக்க வேண்டும்.

விஷ்ணு புராணத்தின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை பாராயணம் செய்வது மிகச் சிறந்த பலனைத் தரவல்லது. முடிந்தால், அதை தினமும் லட்சுமி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யுங்கள், மகிழ்ச்சியும் செழிப்பும் வீட்டில் நிறைவதை உணர முடியும்.

​மன அமைதி கிடைக்கும்

வெள்ளிக்கிழமைகளில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும். எறும்புகளுக்கு இனிப்பு பொருட்களைக் கொடுக்கலாம். இப்படி செய்வதால் மனதை அமைதியாக கிடைக்கும். எறும்புக்கு உணவு வழங்குவதால் மகா விஷ்ணுவின் அருள் பெறலாம். இப்படி விஷ்ணு மற்றும் சிவன் இரண்டையும் பெறலாம்.


அடுத்த செய்தி

டிரெண்டிங்