ஆப்நகரம்

குரு கவசம் பாடி குரு அருள் பெற்றிடுங்கள்

நாம் வேண்டிய பதவி, சம்பள உயர்வு பெற விரும்புபவர்கள் குருவை வழிபடுவது அவசியம். குருவின் அருள் பெற குரு கவசம் பாடுவது அவசியம்.

Samayam Tamil 4 Sep 2020, 5:37 pm
நவகிரகங்களில் முழு சுப கிரகமாக வர்ணிக்கப்படுபவர் குரு பகவான். இந்த குரு கவசத்தை வியாழக்கிழமை அன்று பாடுவது விசேஷம்.
Samayam Tamil Guru Kavasam Lyrics In Tamil
Guru Kavasam Lyrics In Tamil


குரு திசை நடப்பவர்களும், குரு சாதமற்ற இடத்தில் உங்கள் ராசிக்கு அமைந்திருந்தால், இதனை தினமும் பாடி வர குருவின் அருள் அதிகரிக்கும்.

நவகிரக சன்னதியில் குரு பகவானுக்கு முன் நின்று அல்லது குரு சன்னதியில் நின்று பாடிட, அவரின் அருளும், பொருள் வளத்தைப் பெற்றிடுங்கள்

பெரிய பதவி கிடைக்க வேண்டுமானாலும் சரி, உங்களுக்கு குரு அருளால் குழந்தை வரம் பெற வேண்டினாலும் சரி இந்த குரு கவசம் பாடி வர அனைத்து குறைகளும் நீங்கி வளம் பெறலாம்.

குரு பகவானின் பயோடேட்டா - குரு பெயர்ச்சி 2019 பலன்கள்


1.வானவர்க்கு அரசனான வளம் தரும் குருவே! உன்னை
தேனான சொல்லெடுத்து செவி குளிர போற்றுகின்றேன்
காணாத இன்பம் யாவும் காண நீவழி வகுப்பாய்
மீனமும் தனுசும் உந்தன் மேலான வீடதாகும்!

2.பொன்னிற முல்லையொடு புஷ்ப ராகத்தை ஏற்றாய்!
வண்ணத்தில் மஞ்சள் கொண்டாய் மரத்தினில் அரசை ஏற்றாய்!
எண்ணத்தில் நிற்கும் தேவா! எளிதினில் வெற்றி தாராய்!
மண்ணினில் பதினாறு ஆண்டை மறவாமல் நீயும் ஏற்றாய்!

ஆலங்குடி குருபகவான் கோயில் முழு விபரம் - தல வரலாறு மற்றும் சிறப்புகள்

3. சுண்டல் நைவேத்யதால் தொல்லைகள் தீர்ப்பவன் நீ!
கொண்டதோர் யானை உந்தன் கொண்டாடும் வாகனம் தான்!
தந்திடும் பதவி வாய்ப்பும் தடையில்லாக் காரிய சிறப்பும்
வந்திடும் பிள்ளைப் பேறும் வழங்குதல் உன் பொறுப்பே!

4. பொருளோடு புகழைத் தந்து போற்றிடும் வாழ்வைத் தந்து
வருங்காலம் அனைத்தும் செல்வம் வரும் காலம்ஆக்கி வைத்து
பெருமைகள் வழங்க வேண்டும் ! பேரருள் கூட்ட வேண்டும்!
அருள்மிகு குருவே உன்னை அடிப்பணிந்து வணங்குகின்றேன்!

குரு பகவான் ஆலயம்: அருள்மிகு சதாசிவ மூர்த்தி திருக்கோயில் புளியரை

5. வருடம் ஓர் ராசி வீதம் வட்டமாய் சுழன்று வந்தே
தருகிற பலனை நாங்கள் தங்கமாய் ஏற்றுகொள்வோம் !
வருகிற நாட்கள் எல்லாம் வசந்தமாய் மாறுதற்கே
அருள்தரும் உனது பார்வை அனுதினம் எமக்கு வேண்டும்!

பெண் உறுப்புக்கு பூஜை செய்யப்படும் காமாக்யா கோவிலின் வினோத சடங்கு!

6. குருவே நீபார்த்தால் போதும் கோடியாய் நன்மை சேரும்!
திருவருள் இணைந்தால் வாழ்வில் திருமணம் வந்து கூடும்!
பொருள் வகை பெருகும் நாளும் பொன்னான வாழ்வும் சேரும்!
அருள் தர வேண்டி உன்னை அன்போடு துதிகின்றோமே!

அடுத்த செய்தி

டிரெண்டிங்