ஆப்நகரம்

கிருஷ்ண ஜெயந்தி பூஜையில் இருக்க வேண்டிய முக்கிய பொருட்கள்

கிருஷ்ண பரமாத்மாவே, நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பார் என்பது ஐதீகம். அதனால் கோகுலாஷ்டமி பண்டிகை இந்தியா முழுவதும் மிகவும் கோலாகலமாக பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி தினத்தின் போது நாம் பூஜை செய்யும் போது இருக்க வேண்டிய முக்கிய பொருட்கள் என்ன, செய்ய வேண்டியவை என்ன என்பதைப் பார்ப்போம்.

Samayam Tamil 28 Aug 2021, 5:57 pm
கிருஷ்ணர் அவதரித்த அற்புத நாள் கிருஷ்ண ஜெயந்தி தினமாக கொண்டாடப்படுகிறது.
Samayam Tamil krishna janmashtami

அந்த புனித நாளில் விரதம் இருந்து கிருஷ்ணருக்கு அபிஷேகம், அலங்காரம், நைவேத்தியம் படைத்து, அவரின் கதைகள், பாடல்கள், பஜனைகள் பாடி அவரின் அருளைப் பெற்றிடலாம்.

இப்படி செய்வதால் கிருஷ்ண பரமாத்மாவே, நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பார் என்பது ஐதீகம். அதனால் கோகுலாஷ்டமி பண்டிகை இந்தியா முழுவதும் மிகவும் கோலாகலமாக பக்தியுடன் கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி 2021 : கிருஷ்ண பகவான் விரும்பும் 5 விஷயங்கள்

அன்றைய தினத்தில் பூஜைக்குரிய முக்கிய பொருட்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

பூஜைக்கு முன் வீட்டை சுத்தம் செய்து, கிருஷ்ணர் சிலை வைத்து பூஜை செய்யும் இடத்தை மா கோலமிட்டு அலங்கரிக்கவும். கிருஷ்ணரின் பாதம் வீட்டில் வருவது போன்று வைக்கவும்.

கிருஷ்ண பூஜைக்கு உரிய இலை : துளசி பத்ரம்,
எந்த ஒரு பூஜை செய்யும் போதும் வெற்றிலைப் பாக்கு வைப்பது அவசியம்.

பூஜைக்கு உரிய மலர் :
மல்லிகைப் பூ, அலங்காரத்திற்கு வண்ண மலர்களையும் பயன்படுத்தலாம்.

கிருஷ்ண ஜெயந்தி 2021 எப்போது, பூஜைக்கான நேரம், செய்ய வேண்டியவை என்ன?

கிருஷ்ண ஜெயந்தி அன்று நைவேத்தியம் செய்ய உகந்த பொருட்கள் :
வெண்ணெய், பால், தயிர், அவல் முறுக்கு, சீடை முதலியன. பூஜைக்கு வழக்கமாக வைக்கப்படும் தேங்காய், வாழைப்பழம் வைப்பது அவசியம். வேறு பழங்களும் பூஜைக்கு வைக்கலாம்.

எது இருக்கிறதோ இல்லையோ வெண்ணெய் மற்றும் அவல் பூஜையில் இடம்பெறுவது அவசியம்.

அதே போல இனிப்பு செய்ய முடியாவிட்டாலும், நாட்டு சர்க்கரை கலந்த பால் பூஜைக்கு வைப்பது அவசியம்.

கிருஷ்ணனுக்கு உகந்த இந்த மந்திரங்களை சொன்னால் சகலமும் நன்மை தான்!


படிக்க வேண்டிய நூல் / மந்திரம் :
கிருஷண பகவானுக்குரிய கிருஷ்ணாஷ்டக ஸ்தோத்திரம், கிருஷ்ண அஷ்டோத்ர நாமாவளி, ஆண்டாள் அருளிய அஷ்டோத்ர நாமாவளி, ஸ்ரீமத் பாகவதம், கீதையின் நன்னெறிகள், மகாபாரத கதைகள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்