ஆப்நகரம்

எதிரிகளை வெல்வதற்கான துர்க்கை அம்மன் மந்திரம்

ஒருவருக்கு இருக்கும் எதிரிகளின் பிரச்னைகள் தீர, நிம்மதியான வாழ்க்கை அமைய எளிய துர்க்கை அம்மன் மந்திரத்தை இங்கு பார்ப்போம்...

Samayam Tamil 31 Jul 2020, 8:08 pm
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு பிரச்னைகள் இருக்கும். சிலர் எந்த வேலையை செய்தாலும் எதிரிகள் இருக்கக்கூடும். அவர்களை சமாளித்து முன்னேறுவது பெரிய சிக்கலாக இருக்கும்.
Samayam Tamil Lord Durga Devi
Lord Durga Devi


இப்படி எதிரிகள் விலகி, துன்பங்கள் நீங்கி வாழ்வில் நன்மைகளும், மகிழ்ச்சியும் அதிகரிக்க பஞ்ச துர்க்கை அம்மன் வழிபாடு செய்வதும், அம்மனுக்குரிய மந்திரத்தை சொல்லி வழிபடுவது நல்லது.

அதுவும் குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று மாலை இந்த மந்திரத்தை சொல்வது கூடுதல் விசேஷமானது.
துர்க்கை என்றால் யாராலும் வெல்ல முடியாதவள் என்றும், இந்த துர்க்கை அம்மனை வழிபடுவோருக்கு வேண்டிய வரங்களையும், அளப்பறிய நற்பலன்களை அள்ளித்தரக்கூடியவள், எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றலையும், திறமையையும் வழங்குபவள் என்று பொருள்

மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி வழிபட்டு வர சகல செல்வங்களும் சேரும்

மூல மந்திரம்..
ஓம் காத்யாயனய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தன்னோ துர்கிப்ரசோதயாத்

அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம் : மகாலட்சுமி ஸ்லோகம்

பொருள்:
காத்யாயனய என்ற மகரிஷிக்கும் மகளாக பிறந்தவளே
என்றும் இளம் குமரியாக இருப்பவளே
உன்னை வணங்குவோரின் மன குழப்பத்தை நீக்கி, நல்லறிவை கொடுத்து அதன் மூலம் பல நற்பலன்களை அருளக்கூடிய துர்க்கை அம்மனின் பாதத்தைப் பணிகிறோம்.

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

சொல்லும் முறை..
செவாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகள் அம்மனுக்கு உகந்த கிழமைகள். இந்த மந்திரத்தை சொல்லும் போது குளித்து, உடல், மனம் தூய்மையோடு இந்த மந்திரத்தை 108 முறை கூறவும்.

இந்த மந்திரத்தை தொடர்ந்து கூறி வந்தால் மனக் கலக்கம் நீங்கும், எதையும் சாதிக்கும் ஆற்றலும், மன உறுதியும் உண்டாகும். அதனால் எதிரிகளை வெல்லக்கூடிய சக்தி பிறக்கும். அதுமட்டுமல்லாமல் எதிரிகளால் கேடு விளைவிக்கும் எண்ணத்துடன் செய்யக்கூடிய செய்வினை, பில்லி, சூனியம் போன்ற துஷ்ட சக்தியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதிலிருந்து விடுவிக்கும் ஆற்றல் மிக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்