ஆப்நகரம்

சனி கவசம் தமிழ் பாடல் வரிகள்

சனி பகவான் கவசம் பாடி வர நம் துன்பங்களை சனீஸ்வரர் போக்குவார். இந்த சனி கவசத்தை எப்போது பாட வேண்டும், எப்படி பாட வேண்டும் என்பதை இங்கு பார்போம்...

Samayam Tamil 16 Apr 2020, 7:45 pm
நீதி நாயகனாக விளங்குபவர் சனி பகவான். அதனால் எந்த கிரகத்துக் கிடைக்காத ஈஸ்வர பட்டம் சனீஸ்வரருக்கு கிடைத்தது. சனி பகவான் துன்பத்தை மட்டுமல்ல, தன் வேலையை சரியாக, ஞாயமாக, நேர்மையாக செய்பவருக்கு யாரும் எதிர்பாராத நன்மைகளை செய்யக் கூடியவர்.
Samayam Tamil Sani Kavasam
Sani Kavasam


சனீஸ்வரன் துன்பம் தரக் கூடிய ஏழரை சனி காலம், சனி தசை நடக்கும் காலம், அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி நடக்கும் போது, சனீஸ்வரருக்கு எள் விளக்கு ஏற்றி வைத்து, கீழே குறிப்பிட்டுள்ள சனி கவசத்தை மனமுறுகி பாராயணம் செய்யும் போது நம் துன்பங்களிலிருந்து சனிபகவான் விடுவிப்பார்.
சனி கவசம்

கருநிறக் காகம் ஏறி
காசினி தன்னைக் காக்கும்
ஒரு பெரும் கிரகமான
ஒப்பற்ற சனியே! உந்தன்
அருள் கேட்டு வணங்குகின்றேன்!
ஆதரித் தெம்மை காப்பாய்!
பொருளோடு பொன்னை அள்ளி
பூவுலகில் எமக்குத் தாராய்!

கிரகங்களிலேயே மிகவும் பாசமானவர் நீதி அரசர் சனி பகவான்: வழிபடும் முறைகள்

ஏழரைச் சனியாய் வந்தும்
எட்டினில் இடம் பிடித்தும்
கோளாறு நான்கில் தந்தும்
கொண்டதோர் கண்ட கத்தில்
ஏழினில் நின்ற போதும்
இன்னல்கள் தாரா வண்ணம்
ஞாலத்தில் எம்மைக் காக்க
நம்பியே தொழுகின்றேன் நான்!

Also Read: சனிப்பெயர்ச்சியை எளிமையாக புரிந்து கொள்வது எப்படி?: அஷ்டமத்து சனி, கண்ட சனி, அர்த்தாஷ்டம சனி என்றால் என்ன? - பரிகாரங்கள் இதோ

பன்னிரு ராசி கட்கும்
பாரினில் நன்மை கிட்ட
எண்ணிய எண்ணம் எல்லாம்
ஈடேறி வழிகள் காட்ட
எண்ணெய்யில் குளிக்கும் நல்ல
ஈசனே உனைத் துதித்தேன்!
புண்ணியம் எனக்கு தந்தே
புகழ் கூட்ட வேண்டும் நீயே!

கருப்பினில் ஆடை ஏற்றாய்
காகத்தில் ஏறி நின்றாய்
இரும்பினை உலோகமாக்கி
எள் தனில் பிரியம் வைத்தாய்!
அரும்பினில் நீல வண்ணம்
அணிவித்தால் மகிழ்ச்சி கொள்வாய்
பெரும் பொருள் வழங்கும் ஈசா
பேரருள் தருக நீயே!

  • சார்வரி தமிழ் புத்தாண்டு 2020 - 2021 - ராஜயோக பலனைப் பெற உள்ள ராசிகள்!

சனியெனும் கிழமை கொண்டாய்
சங்கடம் விலக வைப்பாய்!
அணிதிகழ் அனுஷம், பூசம்
ஆன்றோர் உத்திரட்டாதி
இனிதே உன் விண்மீனாகும்
எழில் நீலா மனைவியாவாள்!
பணியாக உனக்கு ஆண்டு
பத்தொன்போ தென்று சொல்வாய்!

குளிகனை மகனாய்ப் பெற்றாய்
குறைகளை அகல வைப்பாய்
எழிலான சூரியன் உன்
இணையற்ற தந்தை யாவார்!
விழி பார்த்து பிடித்துக் கொள்வாய்
விநாயகர் அனுமன் தன்னைத்
தொழுதாலோ விலகிச் செல்வாய்
துணையாகி அருளைத் தாராய்!

மகாபாரதத்தில் நீங்கள் அறியாத பல அற்புதமான கதாபாத்திரங்களின் கதைகள்..

அன்ன தானத்தின் மீது
அளவிலா பிரியம் வைத்த
மன்னனே! சனியே! உன்னை
மனதாரப் போற்றுகின்றோம்!
உன்னையே சரணடைந்தோம்!
உயர்வெல்லாம் எமக்குத் தந்தே
மன்னர் போல் வாழ்வதற்கே
மணியான வழி வகுப்பாய்!

மந்தனாம் காரி நீலா
மணியான மகர வாசா!
தந்ததோர் கவசம் கேட்டே
சனி என்னும் எங்கள் ஈசா!
வந்திடும் துயரம் நீக்கு
வாழ்வினை வசந்தம் ஆக்கு!
எந்த நாள் வந்த போதும்
இனிய நாள் ஆக மாற்று!

அடுத்த செய்தி

டிரெண்டிங்