ஆப்நகரம்

ஆடி பௌர்ணமி 2020 விரதம் மகிமையும், வழிபாட்டு முறையும்

ஆடி மாத பெளர்ணமியின் சிறப்புகள் என்ன, இந்த தினத்தில் நாம் பெளர்ணமி விரதம் இருந்து வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கு பார்ப்போம்...

Samayam Tamil 3 Aug 2020, 5:23 pm
தமிழ் மாதம் சூரியனை அடிப்படையாக கொண்டது. சூரியன் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்ககூடிய காலத்தை ஒவ்வொரு தமிழ் மாதமாக பின்பற்றப்படுகிறது.
Samayam Tamil Aadi Pournami
Significance Of Aadi Pournami Viratham And Benefits In Tamil


அந்த வகையில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கக்கூடிய மாதம் ஆடி மாதம். ஆடி மாதம் இறைத்துவம் பொருந்திய மாதந்தகளில் ஒன்று. இறைவனை வழிபடுவதற்காகவே ஒதுக்கப்பட்ட மாதமாகவும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நம் முன்னோர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தான் ஆடி பெருக்கு என்ற தினத்தை வைத்து விவசாய தொழிலை தொடங்கினர்.

ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயம் எப்படி இருக்கும் தெரியுமா?

அதோடு இந்த மாதத்தில் முழு மனதும், உடலும் உழைக்க வேண்டும் என்பதற்காக திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் கூட நடத்தப்படுவதில்லை. அதோடு புதுமண தம்பதிகள் பிரித்து வைக்கப்படுகின்றனர்.

அதிலும் அறிவியலும், ஆன்மிகமும் கலந்த கருத்துக்களை நம் முன்னோர்கள் வைக்கின்றனர்.

உங்கள் உள்ளங்கையில் இந்த ரேகை இருக்கா? அப்போ நீங்க அந்த விசயத்தில் கில்லி தான்!

அதுமட்டுமல்லாமல் கிராமங்களில் ஆடி மாதத்தில் காப்பு கட்டி திருவிழா வைப்பதும், மஞ்ச தண்ணீர், கூல் என நோய் எதிர்ப்பு சக்தியை தரும் விஷயங்களைப் பின்பற்றி வந்தனர்.

ஆடி, அமாவாசை, ஆடி பூரம், ஆடி பெருக்கு என பல விசேஷங்கள் நிறைந்த இந்த ஆடி மாதத்தில் வரும் ஆடி பெளர்ணமியும் மிக விசேஷமாக பார்க்கப்படுகிறது. அதுவும் இந்தாண்டு ஆடி மாத பௌர்ணமியில், ஆவணி மாத பெளர்ணமி தினத்தில் கடைப்பிடிக்கக்கூடிய ஆவணி அவிட்டம் எனும், பூனுல் மாற்றிக் கொள்ளக்கூடிய அற்புத நாள் பின்பற்றப்படுகிறது.

ஆகஸ்ட் மாத ராசி பலன் 2020: ஒவ்வொரு ராசிக்கான நற்பலனும், சந்திராஷ்டம விபரமும்

ஆடி பெளர்ணமி சிறப்பு

2020 ஆண்டு ஆடி பெளர்ணமி ஆகஸ்ட் 3ம் தேதி திங்கட் கிழமை தினம் வருகிறது.
ஆடி மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமி தினம் பொதுவாக உத்திராட நட்சத்திரம் வரும்.
இந்த ஆடி பெளர்ணமி தினம் மகா விஷ்ணுவை வழிபடுவதற்கான மிக உன்னத நாள்.


2020 ஆடி பெளர்ணமி தினத்தில் உத்திரம், திருவோண நட்சத்திரம் இணைந்திருப்பதால் திருமாலுக்கு விசேஷமானதாக பார்க்கப்படுகிறது. இந்த அற்புத நாளில் வீட்டில் விளக்கேற்றி திருமாலை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் ஏற்படும். புண்ணியம் கிடைக்கும். அதோடு உத்தியோகஸ்தர்கள் நினைத்த பதவி கிடைக்கக்கூடும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்