ஆப்நகரம்

துவங்கியது புரட்டாசி மாதம்...பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை!

புரட்டாசி மாதம் இன்று 17ம் தேதி துவங்கியது. இதையொட்டி திருமால் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் பூஜைகள் நடைபெற்றன.

TOI Contributor 17 Sep 2016, 5:30 pm
புரட்டாசி மாதம் இன்று 17ம் தேதி துவங்கியது. இதையொட்டி திருமால் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் பூஜைகள் நடைபெற்றன.
Samayam Tamil purattasi month special poojas in perumal temple
துவங்கியது புரட்டாசி மாதம்...பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை!


பெருமாளுக்கு உகந்த மாதம் என்று புரட்டாசியைப் போற்றுவார்கள். இந்தப் புரட்டாசி மாதத்தில் மாதம் முழுவதும் விரதம் மேற்கொள்வார்கள். சிலர் சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தனைப் பெருமைகள் மிகுந்த புரட்டாசி மாதமே வழிபாட்டுக்கும் பூஜை புனஸ்காரங்களுக்கும்தான் என்று சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

இன்று புரட்டாசி மாதப் பிறப்பு. பொதுவாகவே அமாவாசையிலும் மாதப் பிறப்பிலும் முன்னோரை ஆராதிக்கிற தர்ப்பணங்களைச் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம். அதிலும் குறிப்பாக, இந்த மாதப் பிறப்பில் இருந்து மகாளயப் பட்ச புண்ய காலம் துவங்குகிறது. ஆகவே இந்த நாளில், காவிரி முதலான புண்ணிய நதிக்கரைகளில், பித்ரு தர்ப்பணம் செய்தார்கள்.

ஸ்ரீரங்கத்தில் காலையில் இருந்தே பெருமளவில் பக்தர்கள் வந்து ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்தார்கள். குணசீலம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி ஆலயத்தில் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து பிரார்த்தித்தனர்.

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஸ்ரீபார்த்தசாரதிக்கும் ஸ்ரீநரசிம்மருக்கும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.

சிங்கபெருமாள் கோவில் பகுதியில் அமைந்து உள்ள ஸ்ரீபாடலாத்ரி நரசிம்மர் கோயிலில் இது விழாக்காலம் என்பதால், கூடுதலாகவே பக்தர்கள் வந்து தரிசித்தார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்