ஆப்நகரம்

அத்தி வரதரைக் காண பட்டாக்கத்தியுடன் வந்த 4 பேர் கைது!!

காஞ்சிபுரத்தில் நின்ற கோலத்தில் அருள் பாலித்து வரும் அத்தி வரதரைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில் கோயிலுக்கு 4 பேர் பட்டாக்கத்திகளுடன் வந்து இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 Aug 2019, 5:08 pm
தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்தி வரதர் குளத்தில் இருந்து வெளியே எடுத்து பக்தர்களின் வழிபாட்டுக்கு வைக்கப்படுகிறார். கடந்த 1979க்குப் பின்னர் நடப்பாண்டில் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளார். மொத்தம் 48 நாட்கள் மக்களுக்கு சேவை சாதிப்பார்.
Samayam Tamil Athi varadar 2


சயன கோலத்தில் 24 நாட்கள், நின்ற கோலத்தில் 24 நாட்கள் என மொத்தம் 48 நாட்கள் அருள் பாலிப்பார். கடந்த ஜீன் 1ஆம் தேதி முதல் அத்தி வரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அத்தி வரதர் தரிசனம் துவங்கியதில் இருந்து தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

ஆன் லைன் புக்கிங் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:
அத்தி வரத பெருமாளை எப்போது தரிசிக்க முடியும்?- டிக்கெட் முன்பதிவு விபரம்

ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை நின்ற கோலத்தில் இருக்கும் அத்தி வரதர் மீண்டும் குளத்திற்குள் வைக்கப்படுவார். வெள்ளி தகடுகள் பதிக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டு, கோயில் மண்டபத்தில் வடக்கே உள்ள குளத்தில் வைக்கப்படுவார்.

அத்தி வரதர் கையில் எழுதப்பட்டிருக்கும் ‘ மாசுச ’ என்ற வார்த்தையின் பொருள் தெரியுமா?

தற்போது இவரைக் காண பெரிய அளவில் பக்தர்கள் வந்து கொண்டு இருப்பதால் தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. சிறப்பு அன்னதான திட்டத்தை இந்து சமய அறநிலைத்துறை முதன்மைச் செயலாளர் பணீந்திர ரெட்டி துவக்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ. 10 லட்சம் வழங்கியுள்ளார்.

நீல நிற பட்டு உடுத்தி, எழுந்து நின்று காட்சியளிக்கும் அத்தி வரதர்- காஞ்சியில் திருவிழாக் கோலம்!

இந்த நிலையில் இன்று தரிசனத்திற்கு வந்த பக்தர்களுடன் இணைந்து கையில் பட்டாக்கத்திகளுடன் நான்கு பேர் கலந்து கொண்டுள்ளனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை விசாரித்தனர். அப்போது அவர்களது கையில் பட்டாக்கத்தி இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்