ஆப்நகரம்

Athi Varadar Idol: அத்திவரதரை மீண்டும் குளத்திற்குள் புதைக்கக்கூடாது - ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோபராமானுஜ ஜீயர்

அத்தி வரதரை மீண்டும் குளத்தில் புதைப்பது மிகவும் தவறு என ஏற்றுக் கொள்ள முடியாது என ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோபராமானுஜ ஜீயர் கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 22 Jul 2019, 6:41 pm

சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்தி மரத்தால் செய்யப்பட்ட அத்தி வரதரை பக்தர்கள் தரிசிக்க பார்வைக்கு வைப்பது கோயில் நிர்வாகத்தின் வழக்கம். பல காலமாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது.
Samayam Tamil Sadagopa Ramanuja Jeeyar


தற்போது அத்திவரதர் தரிசனம் மிக பரபரப்பாக நடந்து வருகின்றது. 48 நாட்கள் முடிந்த பின்னர் மீண்டும் அத்திவரதரை குளத்தில் வைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அத்தி வரதரை மீண்டும் குளத்தில் புதைக்கக் கூடாது என முதல்வரிடம் கடிதம் அளிக்க உள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோபராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.

அத்தி வரதர் சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

இரண்டு மூன்று மடாதிபதிகளுடன் ஆலோசனை செய்து, திருக்கோயிலூர் ஜீயர் சாமிகள் கூட சாமியை புதைகக் கூடாது என கடிதம் கொடுத்துள்ளார்.

பெருமாளை காற்றுபுகாத இடத்தில் வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. முன்பு சிலை திருட்டு பயம் இருந்த காலத்தில் சிலை குளத்தில் புதைத்து வைத்திருந்தனர். ஆனால் இப்போது அப்படி கிடையாது.

குளத்திலிருந்து அத்தி வரதர் வெளியே எடுப்படும் புகைப்படங்கள்

அத்தி வரதர் -ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் புராண வரலாறு
அதனால் அத்தி வரதர் சுவாமியை திருக்கோயிலிலேயே வைத்து பூஜை நடத்த வேண்டும் என அனைத்து மடாதிபதிகளும் சேர்ந்து முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுக்க உள்ளோம் என ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோபராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்