ஆப்நகரம்

இனி அத்தி வரதரை தரிசிக்க 2 நாட்கள் கூட ஆகலாம்... பக்தர்களுக்கு முன்னெச்சரிக்கை

அத்தி வரதரை தரிசிக்க கூட்டம் தினமும் அதிகரித்து வருவதால் இனி தரிசன நேரம் 2 நாட்கள் கூட ஆகலாம் என்பதால் பக்தர்ள் முன் ஏற்பாட்டுடன் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Aug 2019, 3:00 pm

தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வரும் அத்தி வரதரை இனி தரிசிக்க 2 நாட்கள் கூட ஆகலாம் என்றும் அதற்கான முன்னேற்பாட்டுடன் வர பக்தர்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Athi Varadar Darshan Time


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் அத்தி வரதர் வைபவம் மிக சிறப்பாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இன்னும் 10 நாட்கள் மட்டும் அத்தி வரதரை தரிசிக்க முடியும் என்பதால், அவரை தரிசிக்க கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனால் அத்தி வரதரை தரிசிக்க 2 நாட்கள் கூட ஆக வாய்ப்புள்ளதால், பக்தர்கள் முன்னெச்சரிக்கையுடன் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா பேசியதாவது:
அத்தி வரதரை 37 நாட்களில் 49 லட்சத்து 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மட்டும் 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.
இன்னும் 10 நாட்கள் மட்டும் அத்தி வரதரை தரிசிக்க முடியும் என்பதால், இனி வரும் நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அத்தி வரத பெருமாளை எப்போது தரிசிக்க முடியும்?- டிக்கெட் முன்பதிவு விபரம்

விஐபி தரிசனம் ரத்து:
இதன் காரணத்தால் ஆகஸ்ட் 16, 17ம் தேதி விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. 16ம் தேதி உள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என கூறப்பட்டுள்ளது. அதே போல் 17ம் தேதி நண்கல் 12 மணியுடன் கிழக்கு கோபுர வாசல் மூடப்படும். உள்ளே இருக்கு பக்தர்கள் மாலை 5 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். பின்னர் அத்தி வரதர் அவரது பூர்வாங்க இடத்திற்கு வைக்கும் பணிகள் தொடங்கும் என்றார்.

அத்தி வரதர் வைபவம் 16ம் தேதியுடன் நிறைவு, 17ம் தேதி தரிசனம் ரத்து

2 நாட்கள் ஆகலாம்:
மிக அதிகமாக வரும் பக்தர்கள் கூட்டத்தை வரிசைக்கு அனுப்ப, தேக்கி வைத்து அனுப்பும் நிலை உள்ளது.
தற்போது ஒருமணி நேரத்தில் 10 ஆயிரம் முதல் 11 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இனி 3 அல்லது 4 லட்சம் பக்தர்கள் தினமும் வரக்கூடும் என்பதால், அத்தி வரதரை தரிசன செய்ய ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் கூட ஆக வாய்ப்புள்ளது.

அத்தி வரதர் சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

பக்தர்கள் தேக்கி வைப்பதற்கான ஒரு இடத்தில் வைத்து, அங்கிருந்து அவர்களை வரிசைக்கு அழைத்து வர மின் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வரதரை தரிசிக்க 2 நாட்கள் ஆகலாம் என்பதால் பக்தர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. என்ன தான் கூட்டம் இருப்பதாக பலர் செய்திகள் பார்த்தாலும், பக்தர்களின் கூட்டம் குறைந்தபாடில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்