ஆப்நகரம்

ராஜ கிரீட அலங்காரத்தில் ராஜாவாக மாறிய ஸ்ரீ அத்தி வரதர்!

இன்றைய 42வது நாள் அத்தி வரதரின் அலங்காரம் பலரையும் மெய்சிலிர்க்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

Samayam Tamil 11 Aug 2019, 3:29 pm
இன்றைய 42வது நாள் அத்தி வரதரின் அலங்காரம் பலரையும் மெய்சிலிர்க்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது.
Samayam Tamil Athi Varadar Crown


அத்தி வரதர் வைபவம் நடந்து வரும் நிலையில் பல லட்சக் கணக்கானோர் தரிசனம் செய்து வரும் நிலையில், தற்போதும் பலரின் ஆவலாக அத்தி வரதரின் தரிசனத்தைப் பார்த்தாக வேண்டும் என்பதாக தான் உள்ளது.

வரும் ஆகஸ்ட் 16ம் தேதியோடு அத்தி வரதரின் தரிசனம் முடிக்கப்படுவதாகவும், 17ம் தேதி அவருக்கான ஆகம முறைப்படி பூஜைகள் செய்து மீண்டும் அவர் இருந்த அனந்த புஸ்கரனியில் வைக்கப்பட உள்ளார்.

இன்று அத்தி வரதரை தரிசிக்க கடைசி வார விடுமுறை நாள் என்பதால் பல லட்சம் மக்கள் காஞ்சிபுரத்தை ஆக்கிரமித்துள்ளனர்.


ராஜாவான அத்தி வரதர்:
ஒவ்வொரு நாளும் அத்தி வரதர் புதிய பட்டு வஸ்திரம் அணிந்து, புது அலங்காரத்தில் காட்சி அளிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று ராஜ கிரீடம் அணிந்து ராஜா போல காட்சி தருகின்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்