ஆப்நகரம்

அத்திவரதர் தரிசன கூட்டத்தை குறைக்க அதிரடி நடவடிக்கை!- தரிசன நேரம் குறைப்பு

அத்தி வரதரை தரிசிக்க கூட்டம் அதிகமாக வருவதால் வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவரை தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Jul 2019, 6:27 pm
அத்தி வரதரை மட்டும் தான் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும், வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவரை தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Athi varadar Booking


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சுமார் 40 வருடங்களுக்கு ஒருமுறை அருள்பாலிக்கும் அத்தி வரதர் வைபவம் தற்போது மிக விமர்சையாக நடைப்பெற்று வருகின்றது.

அத்தி வரத பெருமாளை எப்போது தரிசிக்க முடியும்?- டிக்கெட் முன்பதிவு விபரம்

மூலவரை தரிசிக்க முடியாது:
காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் முடியும் வரை வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவரை தரிசனம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.

அத்தி வரதர் -ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் புராண வரலாறு
அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் மட்டும் தான் அனுமதி வழங்கப்படும் என்றும், மாலை 6 மணி வரை மட்டும் விஐபி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் மூலவரை தரிசிக்க கூடும் கூட்டம், விஐபி தரிசன கூட்டம் இந்த நேரங்களில் குறையும் என்பதால் அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் சற்று எளிதாக சுவாமி தரிசனம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்