ஆப்நகரம்

அத்திவரதரை குடும்பத்துடன் சென்று தரிசித்த விஜயகாந்த்

தேமுதிக தலைவா் விஜயகாந்த் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சென்று காஞ்சிபுரத்தில் உள்ள அத்தி வரதரை தரிசனம் செய்தார்.

Samayam Tamil 11 Jul 2019, 5:17 pm
காஞ்சிபுரத்தில் அருள்பாலித்து வரும் அத்திவரதரை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வரும் நிலையில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அத்திவரதரை தரிசித்தார்.
Samayam Tamil Vijayakanth in Kanchi


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த 1-ந்தேதி தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. 40 வருடங்களுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்தி வரததை கடந்த 10 நாட்களில் 11 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அத்திவரதரை தரிசிக்க வெளி மாநிலம், வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அத்தி வரதரை நாளை மாலை தரிசிக்க உள்ளார். அவரைத் தொடர்ந்து பிரதமா் நரேந்திர மோடியும் அத்தி வரதரை தரிசிப்பதற்காக காஞ்சிபுரம் வரவுள்ளார்.

இரண்டு நாட்கள் தமிழகத்தில் தங்கியிருந்து அத்திவரதரை சயண கோலத்திலும், நின்ற கோலத்திலும் தரிசிக்க உள்ளார்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் அத்திவரதரை சென்று தரிசித்தார். இதனைத் தொடர்ந்து கட்சியின் பொருளாளரும், மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், அத்தி வரதரை லட்சக்கணக்கான மக்கள் வணங்கி சென்று வருகின்றனர் . தமிழகத்தில் மழை இன்றி தற்போது கடும் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் மக்கள் மழை வேண்டி ஆதி அத்தி வரதரை பிரார்த்தின்றனர்.

தமிழகத்தில் நிச்சயம் நல்லது நடக்கும் என குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ததாக கூறினார். அதன் பின் தனது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் மித்திரன் எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பூஜை செய்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்