ஆப்நகரம்

அத்தி வரதர் மூலம் ரூ. 8 கோடி வருவாய் ஈட்டிய இந்து அறநிலைய துறை!

அத்தி வரதர் வைபவம் மூலம் இந்து அறநிலைய துறை ரூ. 8 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

Samayam Tamil 17 Aug 2019, 5:38 pm
அத்தி வரதர் வைபவம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இன்று இரவு அத்தி வரதரின் சிலை கோயில் திருக்குளத்தில் வைக்கப்பட உள்ளது.
Samayam Tamil Athi Varadar Day 40a


40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்குளத்திலிருந்து அத்தி வரதர் சிலை எடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான அத்தி வர்தர் வைபவம் ஜூலை 1ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16ம் தேதி வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஜூலை 1 -31 வரை சயன கோலத்தில் காட்சி தந்த அத்தி வரதர், ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் அருள்பாலித்தார். மொத்தம் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அத்தி வரதருக்கு தைலக்காப்பு ஏன் செய்யப்படுகிறது தெரியுமா?

47 நாட்களில் 1 கோடியே 7 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

8 கோடி வருமானம்:
அத்தி வரதர் வைபவம் மூலம் இந்து அறநிலைய துறைக்கு ரூ. 8 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக குறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அத்தி வரதர் இன்று மீண்டும் அனந்த புஷ்கரணியில் வைக்கப்பட உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்