ஆப்நகரம்

கோயில் ஆரத்தி தட்டில் பகதர்கள் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்க தடை- அரசு அதிரடி உத்தரவு

பக்தர்கள் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்கக் கூடாது என தடை விதித்துள்ளது கர்நாடகா மாநில அரசு. அதே சமயம் சம்பள உயர்வு அறிவித்து அசத்தி உள்ளது.

Samayam Tamil 2 Jul 2019, 1:50 pm
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ல இந்து கோயில்களில், ஆரத்தி தட்டு காட்டும் போது பக்தர்கள் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்கக் கூடாது என கர்நாடகா மாநில அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil Temple Offering


கர்நாடகா மாநிலத்தில், இந்து அறநிலையத் துறையின் கீழ் சுமார் 34,000 கோயிகள் இயங்கி வருகின்றன. கோயில் அர்ச்சகர்கள் தங்களுக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும் என பல காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

புதிய உத்தரவு:
இந்நிலையில் கர்நாடகா மாநில அரசு அர்ச்சகர்களுக்கு 6வது ஊதியக் குழு அடிப்படையில் சம்பள உயர்வு மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என அரசாணை வெளியிட்டது.

ஆனால் அதே சமயம், கோயிலில் பக்தர்களுக்கு ஆரத்தி தட்டு காட்டும் போது பக்தர்கள் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுத்து பயன்படுத்தக் கூடாது அந்த அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

காணிக்கையை கோயில் வருமானத்தில் சேர்க்க வேண்டும் என கூறியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்