ஆப்நகரம்

கரூர் தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ ஆதி மாரியம்மன் ஆலய திருவீதி உலா

கரூர் தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ ஆதி மாரியம்மன் ஆலயத்தின் உற்சவர் திருவீதி உலாவில் சுவாமி புலி வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Samayam Tamil 6 Jul 2019, 8:02 pm
கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை சுங்ககேட் பகுதியில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஆதி மாரியம்மன் ஆலயத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்று வரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக உற்சவர் திருவீதி உலாவில் சுவாமி புலி வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த பிறகு ஆலயத்திலிருந்து கற்பூர தீபாராதனை சுவாமிக்கு காண்பிக்கப்பட்டது.
Samayam Tamil Mariyamman


பிறகு ஆலயத்தில் இருந்து பக்தர்கள் தோள்மீது சுமந்தபடி ரத வாகனத்தில் கொலுவிருக்கச் செய்தனர்.பின்னர் தாரை தப்பட்டைகள், வானவேடிக்கைகளுடன் சுவாமி ஆதிமாரியம்மன் புலி வாகனத்தில் திருவீதி உலா மிக சிறப்பாக புறப்பட்டது. பின்னர் முக்கிய வீதிகள் வழியாக தான்தோன்றி கிராமம் கருப்பகவுண்டன்புதூரில் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ ஆதி மாரியம்மன் ரத வாகனம் வந்தடைந்தது. பின்னர் அங்கு பக்தர்கள் தேங்காய் ,பழத்துடன் சுவாமி வருகையை முன்னிட்டு காத்திருந்தனர் .பின்னர் வரிசையாக நின்ற படி சுவாமி உற்சவர் ஆதி மாரியம்மனுக்கு தேங்காய் பழம் வழிபாடு நடைபெற்றது.

பின்னர் சுவாமி உற்சவருக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு, கற்பூர தீபாராதனை நடைபெற்றது. கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் கற்பூர தீபாராதனை மற்றும் விபூதி பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இறுதியாக ஆன்மீக பக்தர்கள் தாங்கள் கும்மி அடித்து சுவாமி ஆதிமாரியம்மன் பாடலைப் பாடியபடி மனமுருகி சுவாமியை வழிபட்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கரூர் தான்தோன்றி கிராமம் கருப்பகவுண்டன் புதூர் பொதுமக்கள் சார்பாக மிகச் சிறப்பாக செய்து இருந்தனர். 13 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற உற்சவம் திருவீதி உலாவில் காண அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்