ஆப்நகரம்

நாளை சந்திர கிரகணம்! செய்யக் வேண்டியதும், செய்யக் கூடாததும்!!

இந்தியாவில் இன்று இரவு சந்திர கிரகணம் தோன்றுகிறது. சந்திர கிரகணம் என்றால் என்ன, கிரகணத்தின் போது செய்யக் கூடிய, செய்யக் கூடாத விஷயங்களை இங்கு காணலாம்.

Samayam Tamil 4 Jun 2020, 8:14 pm
இன்று இரவு சந்திர கிரகணம் தோன்றுகிறது. இந்தியாவிலும், மற்ற சில நாடுகளிலும் இதனை வெறும் கண்ணால் பார்க்க முடியும். கிரகணத்தை எப்போது பார்க்கலாம், அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
Samayam Tamil lunar eclipse


சூரியன், பூமி, சந்திரன்., இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் உண்டாகிறது. அந்நேரத்தில் பூமியினுடைய நிழல் நிலவின் மீது விழுந்தால் அதனை சந்திர கிரகணம் அல்லது நிலவு மறைப்பு என்கிறோம். சூரியின் வெளிச்சம் இல்லாததால் அந்த நேரத்தில் நிலவு தெரியாது. இதே போல், சூரியனை நிலவு கடந்து செல்லும் போது, சிறிய அளவில் சூரியன் மறைக்கப்படுகிறது. இதை சூரிய கிரகணம் என்கிறோம்.

சந்திர கிரகணத்தால் பாதிக்கப்பட உள்ள ராசி நட்சத்திரங்கள்: எளிய உபாயம் இதோ!

இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி தோன்றியது. இந்நிலையில், தற்போது அதே போன்று நாளை ஜூன் 5ம் தேதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் நாளை இரவு சரியாக 11.15 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகிறது. பின்பு, 2.34 மணி வரை சுமார் 3 மணி நேரம் 14 நிமிடம் வரையில் சந்திரகிரகண காலம் உள்ளது.

Also Read: திருப்பதி கோவிலில் சந்திர கிரகணத்தையொட்டி பல சிறப்பு தரிசனங்களைத் ரத்து!

இது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென்அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தோன்றுகிறது. சர்வதேச நேரத்தைப் பொறுத்து நாளையும், நாளை மறுநாளும் சந்திரகிரகணம் தோன்றுகிறது.



கிரகணத்தின் போது செய்யக்கூடாதவை என ஆன்மிகம், அறிவியல் சொல்லும் உண்மைகள் இதோ!

கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை:
கர்ப்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது.

கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது. எனவேதான் ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டு விடுகின்றன.

கிரகண சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும்.

ஒரு பெண் இந்தச் சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும்.

கிரகண காலத்தில் உடலில் எண்ணெய் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது

Also Read: பிரதோஷ நிகழ்வை எத்தனை தடவை பார்த்தால் என்னென்ன பலன்கள் தெரியுமா?

கிரகணத்தின் முடிந்ததும் செய்ய வேண்டியவை:

கிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது.

கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு குளித்து விட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும். பின்பு, ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே சாப்பிட வேண்டும்

அடுத்த செய்தி

டிரெண்டிங்