ஆப்நகரம்

அத்திவரதரை தரிசித்த 1 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள்... உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா?

அத்தி வரதர் வைபவத்தி கிட்டத்தட்ட 1 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்ததாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Aug 2019, 1:43 pm
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்தி வரதர் வைபவம் நடைப்பெற்றது. இதில் ஒருகோடிக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்ததாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Ponnaiya


ஜூலை 1ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைப்பெற்ற அத்தி வரதர் வைபவத்தின் இறுதிநாளான இன்று, மாலை மீண்டும் அனந்த புஷ்கரணியில் மீண்டும் சயன நிலையில் வைக்கப்பட உள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா பேசியதாவது:
அத்தி வரதர வைபவத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக எங்களுடன் பணியாற்றிய அனைத்து துறை ஊழியர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்தி வரதர் குளத்தில் சேதமடையாமல் இருக்க பயன்படுத்தப்படும் எண்ணெய் எப்படி செய்யப்படுகிறது?... விளக்கும் வரதராஜ பெருமாள் கோவில் பட்டர்

லட்சக்கணக்கான பக்தர்கள் நாள் தோறும் வந்து சென்றதால் நகரில் துப்புறவு பணியில் ஈடுபட மேலும் 2 நாட்களுக்கு துப்புரவு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமும் லட்சக்கணக்கான பகதர்கள் தரிசனம் செய்த நிலையில் 47 நாட்களில் 1 கோடியே 7 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

அத்திவரதரை வைத்து நடந்த அபார ஊழல் வைபவம்-கோடிக்கணக்கில் வேட்டை உண்மையா?

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தில் உண்டியல் காணிக்கையாக ரூ 7 கோடி வசூலாகி உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்