ஆப்நகரம்

அத்தி வரதரை குளத்தில் இறக்கும் பணி இப்போதே தொடங்கியது!

அத்தி வரதரை ஆகஸ்ட் 17ம் தேதி மீண்டும் குளத்தில் வைக்க உள்ளதால், குளத்தில் வைப்பதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 9 Aug 2019, 1:25 pm
அத்தி வரதரை மீண்டும் குளத்தில் வைப்பதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
Samayam Tamil Athi Varadar Temple Tank 2


சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அத்தி வரதர் வைபவம் தற்போது ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடக்கிறது. ஜூலை 31 வரை சயண கோலம் பூண்டிருந்த பெருமாள், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் தரிசித்து வருகின்றார்.

தமிழ் நாட்டில் உள்ள இறை நம்பிக்கை உள்ளவர்களின் ஒரே பேச்சு அத்தி வரதராக தான் இருக்கும். அந்தளவிற்கு அத்தி வரதர் வைபவத்தில், வரதரை பார்த்துவிட மாட்டோமா என பலரும் ஏங்கி வருகின்றனர்.


வரும் ஆகஸ்ட் 16ம் தேதி தான் பக்தர்கள் தரிசனம் செய்ய இறுதி நாள் என்பதால் காஞ்சிபுரத்திற்கு பக்தர்கள் பலர் குவிய தொடங்கி உள்ளனர்.


மீண்டும் குளத்தில்:
இந்நிலையில் அத்தி வரதர் தரிசனம் வரும் 16ம் தேதியுடன் பொதுமக்களின் தரிசனம் முடிந்த பின்னர் 17ம் தேதி அத்தி வரதருக்கு ஆகம விதிப்படி சடங்குகள் செய்யப்பட்டு, அன்று இரவு மீண்டும் கோயிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட உள்ளார்.

அத்தி வரதர் வைபவம் 16ம் தேதியுடன் நிறைவு, 17ம் தேதி தரிசனம் ரத்து

குளத்தை தூய்மை செய்து தயார் படுத்தும் பணிகள் தொடங்கி உள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் அனந்த சரஸ் குளத்தை சுத்தம் செய்யும் முதற்கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.


அத்தி வரதர் தரிசன நன்கொடை டிக்கெட் : பக்தர்கள் ஏமாற வேண்டாம்

வரும் 15ம் தேதியுடன் விஐபி தரிசனம் நிறுத்தப்படும் என்றும், 16ம் தேதி முழுவது பொது தரிசனம் மட்டும் அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்