ஆப்நகரம்

புரி ஜெகன்னாதர் பிரமாண்ட ரத யாத்திரை தொடங்கியது!- மோடி வாழ்த்து

ஒடிசா மாநிலம் புரி ஜெகன்னாதர் ரத யாத்திரை இன்று பிரமாண்டமாக தொடங்கியது. இதற்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 4 Jul 2019, 6:17 pm
ஒடிசா மாநிலம் புரி ஜெகன்னாதர் ரத யாத்திரை இன்று பிரமாண்டமாக தொடங்கியது.
Samayam Tamil Jagannath Rath Yatra


கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை நடக்கும் இந்த பிரமாண்ட திருவிழா நாள் ஜெகன்னாதர் ரத யாத்திரையுடன் தொடங்கியது.

மிகவும் புகழ் பெற்ற ரத யாத்திரையைப் பார்க்க இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் பல நாடுகளிலிருந்து புரிக்கு குவிவது வழக்கம். ஒடிசா மாநிலத்தின் மிக முக்கிய திருவிழாவாக இந்த ரத யாத்திரை திகழ்கிறது. புரி ஜெகன்னாதர் ஆலயத்தின் திருவிழா இன்று ரத யாத்திரையுடன் தொடங்கி ஜூலை 12ம் தேதி வரை நடைப்பெறுகிறது.

இந்த ரத யாத்திரை மிகவும் பிரபலம் என்பதால் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.




அடுத்த செய்தி

டிரெண்டிங்