ஆப்நகரம்

சபரிமலை ஐயப்பனிடம் குறையை சொல்ல இப்படி ஒரு வழியா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே

சபரிமலை சன்னிதானத்தில் மாளிகைப்புறம் கோவில் அருகே சபரிமலை போஸ்ட் ஆபீஸ் செயல்படுகிறது. மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில் மட்டுமே இது செயல்படும். சுவாமி ஐயப்பனுக்கே பெரும்பாலான பக்தர்கள் கடிதம் அனுப்புகிறார்கள். பக்தர்கள் அனுப்பும் கடிதங்கள் பெரும்பாலும் வேண்டுதல் தொடர்பாக இருக்கும். சிலர் தங்கள் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டி எழுதுவர். சிலர் தங்கள் பிள்ளைகளின் திருமண அழைப்பிதழை அனுப்புவர். சிலபேர் தங்களின் கஷ்டங்களை எழுதி அனுப்புவார்கள், சில பேர் தன்னுடைய காணிக்கையை மணியார்டர் மூலமாக அனுப்புவர்.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 23 Nov 2022, 10:52 am
சபரிமலை சன்னிதானத்தில் மாளிகைப்புறம் கோவில் அருகே சபரிமலை போஸ்ட் ஆபீஸ் செயல்படுகிறது. மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில் மட்டுமே இது செயல்படும். சுவாமி ஐயப்பனுக்கே பெரும்பாலான பக்தர்கள் கடிதம் அனுப்புகிறார்கள். பக்தர்கள் அனுப்பும் கடிதங்கள் பெரும்பாலும் வேண்டுதல் தொடர்பாக இருக்கும். சிலர் தங்கள் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டி எழுதுவர். சிலர் தங்கள் பிள்ளைகளின் திருமண அழைப்பிதழை அனுப்புவர். சிலபேர் தங்களின் கஷ்டங்களை எழுதி அனுப்புவார்கள், சில பேர் தன்னுடைய காணிக்கையை மணியார்டர் மூலமாக அனுப்புவர்.
Samayam Tamil post-f


துயரங்கள் போக்கும் கார்த்திகை அமாவாசை 2022 எப்போது? எப்படி விரதம் இருக்க வேண்டும்?

இவ்வாறு தாங்கள் அனுப்பும் கடிதத்தை ஐயப்பனே பிரித்து படித்து, தங்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக பக்தர்களின் நம்பிக்கை. இவற்றை ஐயப்பன் முன் வைத்து விட்டு, பிறகு நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைத்து விடுவர். கடந்த 1963 ம் ஆண்டு முதல் சபரிமலையில் போஸ்ட் ஆபீஸ் செயல்பட துவங்கியது. இதைத் தொடர்ந்து ஐயப்பன் படம் மற்றும் 18 படிகளுடன் கூடிய முத்திரை அறிமுகமானது.

இந்த முத்திரை பதித்த கடிதம் தங்கள் வீடுகளுக்கு வருவதை பக்தர்கள் புண்ணியமாக கருதுகின்றனர். சபரிமலைக்கு 689713 என்ற பின்கோடும் உண்டு. நம் நாட்டில் சபரிமலை நம் ஐயப்பனுக்கும், ஜனாதிபதிக்கும் மட்டுமே தனி பின்கோடு உள்ளது.1974 ம் ஆண்டு சபரிமலை அஞ்சல் முத்திரை அமலுக்கு வந்தது.

சிவராத்திரி அன்று சொல்ல வேண்டிய சக்திவாய்ந்த சிவ மந்திரங்கள்

நாட்டில் வேறு எந்த தபால் நிலையத்திலும் இது போன்ற தனி அஞ்சல் முத்திரை பயன்படுத்தப்படுவதில்லை. இந்திய அஞ்சல் துறையும் அதற்கு அனுமதிப்பதில்லை. மண்டல, மகரவிளக்கு பூஜை முடிந்ததும்இந்த சிறப்பு அஞ்சல் முத்திரை, பத்தனம்திட்டா அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலக லாக்கரில் வைத்து பாதுகாக்கப்படும்.

மண்டல, மகரவிளக்கு பூஜை நடைபெறும் காலத்தில் மட்டுமே இந்த தபால் எண் செயல்பாட்டில் இருக்கும். 62 நாட்களுக்கு பிறகு இந்த அஞ்சல் குறியீட்டு எண் செயலிழப்பு செய்யப்படும். மீண்டும் அடுத்த ஆண்டு மண்டல, மகரவிளக்கு பூஜை சமயத்திலேயே பயன்படுத்தப்படும். ஐயப்பனிற்கான தபால் குறியீட்டு எண்ணிற்கு வரும் கடிதங்களை படிக்க ஓராண்டு கூட போதாது என்னும் அளவிற்கு அவ்வளவு கடிதங்கள் தினமும் வருவதாக தபால் நிலைய அலுவலர்கள் கூறுகின்றனர். பலரும் தங்களின் கவலை, சோகம், கஷ்டம், வீட்டில் நடக்கும் விசேஷங்கள் என பலவிதமான உணர்வுகளை பகிர்ந்து கடிதங்களை அனுப்புவதாக சொல்லப்படுகிறது.

ஐயப்பன் அறுபடை வீடு - திருமணக் கோலத்தில் ஐயப்பன் காட்சி தரும் ஆரியங்காவு ஐயப்பன் கோவில்

இன்று வரை இந்த தபால் நிலையத்திற்கு வரும் கடிதங்கள் தலை சுமையாக மட்டுமே கொண்டு வரப்படுவதாக சொல்லப்படுகிறது. ஐயப்பனின் உருவம் மற்றும் 18 படிகளுடன் கூடிய முத்திரையிடப்பட்ட தபால் கவர்களை வாங்கிச் செல்வதற்கும் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து பெற்றுச் செல்கின்றனர். இந்த தபால் அலுவலகத்தில் ஒரு போஸ்ட் மாஸ்டர் மற்றும் இரண்டு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்