ஆப்நகரம்

Athi Varadar Darshan: அத்தி வரதரை தரிசித்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

அத்தி வரதர் மற்றும் திருப்பதி பெருமாளை தரிசிக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று வருகை புரிகிறார்.

Samayam Tamil 12 Aug 2019, 3:24 pm
அத்தி வரதரை தரிசனம் செய்ய தெலுங்கானா முதல்வர் இன்று வந்துள்ளார், அதோடு பல கோயில்களில் தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
Samayam Tamil CM KCR


அத்தி வரதர் வைபவம் ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடைப்பெறுகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் வருகின்றனர். பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்த நிலையில் தற்போது, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தரிசனம் செய்தார். அவரோடு நடிகை ரோஜா தரிசனம் செய்தார்.

அத்தி வரதர் தரிசன ஆன்லைன் டிக்கெட் இனி முன் பதிவு செய்ய முடியாது!

ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வந்த சந்திரசேகர் ராவ், அங்கிருந்து கார் மூலம் வந்து அத்தி வரதரை தரிசனம் செய்தார். அத்தி வரதரை தரிசனம் செய்த பின்னர் தற்போது திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய செல்ல உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்