ஆப்நகரம்

ஆடி அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்

ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பல்வேறு இடங்களில் புனித நீர்நிலைகள் அருகே மக்கள் குவிந்தனர்.

Samayam Tamil 31 Jul 2019, 1:50 pm
தமிழ்நாட்டில் ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுக்க சிறந்த இடமான ராமேஸ்வரம், கன்னியாகுமரி, காவிரி ஆற்றின் படித்துறைகள் உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.
Samayam Tamil Aadi Amavasya 2


பக்தர்கள் குவிந்த இடங்கள்:
தூத்துக்குடி புதிய துறைமுகம் மற்றும் திரேஸ்புரம் கடற்கரை பகுதி, திருச்செந்தூர் கடற்கரைப் பகுதியில் மக்கள் குவிந்து தர்ப்பணம் செய்தனர்.


கன்னியாகுமரி: முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கம கடல்.



திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன், ஓடத்துறை உள்ளிட்ட காவிரிப் படித்துறைகளில்

திருவாரூர்: கமலாலய தீர்த்தகுளத்தில் பலர் திதிகொடுத்தனர்.


ராமேஸ்வரம்: அக்னிதீர்த்தக் கடலில் பித்துருக்களுக்கு பிண்டம், எள் வைத்து முன்னோர்களுக்கு பூஜை செய்தனர்.


நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே, தாமிரபரணி ஆறு பாயும் பாபநாசம் படித்துறையில் பலர் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.


தஞ்சை மாவட்டம், திருவையாறு காவிரிக்கரையில் உள்ள புஷ்ய மண்டபத்துறை



ஈரோடு மாவட்டத்தில், காவிரி, பவானி, அமுத நதி, ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.


இதேபோல் தென்காசி, தூத்துக்குடி , நாகை மாவட்டம் வேதாரண்யம் உள்ளிட்ட ஊர்களிலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்