ஆப்நகரம்

திருச்செந்தூர் தைப்பூச திருவிழா : பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் அறிவிப்பு

முருகப் பெருமானுக்குரிய முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பூச விழா பிப்ரவரி 05 ம் தேதியான நாளை கொண்டாடப்பட உள்ளன. இதற்காக ஆயிரக்கணக்கில் முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஏற்கனவே ஏராளமானோர் காவடி ஏந்தியும், அலகு குத்தியும் வந்து கொண்டிருக்கும் சமயத்தில், நாளை தைப்பூசத்தன்று பால்குடம் ஏந்தியும் பாத யாத்திரை வருவார்கள். இதனால் நாளை நாள் முழுவதும் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 4 Feb 2023, 3:54 pm
முருகனின் அறுபடை வீடுகளில் பழனிக்கு அடுத்தபடியாக, இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் தைப்பூச விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தைப்பூச விழா பிப்ரவரி 05 ம் தேதி நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி ஏந்தியும் பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்து கொண்டிருக்கின்றனர். பறவைக் காவடி எடுத்து அதிகமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
Samayam Tamil chendur


தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் பாத யாத்திரை வருவது வழக்கம். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம் : எவ்வாறு வழிபடுவது?

தைப்பூச விழாவை முன்னிட்டு நாளை அதிகாலை 01 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 4.30 மணிக்கு தீர்த்தவாரியும் நடத்தப்பட உள்ளது. மாலையில் முருகப் பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

திருவண்ணாமலை கிரிவலம் : ஆண்கள், பெண்கள் எப்படி செல்ல வேண்டும் தெரியுமா?

உற்சவ மூர்த்திகளில் ஒருவரான சண்முகர் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நாள் என்பதால், பிப்ரவரி 03 ம் தேதி காலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, முருகப் பெருமானுக்கு நாள் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. திருச்செந்தூர் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், திருச்செந்தூர் தைப்பூச விழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை போலீசார் அறிவித்துள்ளனர். அதன் முழு விபரம் இதோ :

தைப்பூசம் இன்றா? நாளையா? : தைப்பூச வழிபாட்டிற்கான சரியான நேரம் எது?

பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் :

* பாத யாத்திரை வரும் பக்தர்கள் விபத்துக்களில் சிக்காமல் இருக்க சாலையின் வலது புறங்களில் வர வேண்டும்.

* பாத யாத்திரை வரும் பக்தர்கள், முதுகு பகுதி மற்றும் பைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டி பாதுகாப்பாக வர வேண்டும்.

* விபத்து இல்லாத தைப்பூச விழாவை கொண்டாட பக்தர்கள், போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

* கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாதி ரீதியான அடையாளங்கள் பொறிக்கப்பட்ட பனியன்கள், சட்டைகள் அணிந்தோ, சாதி ரீதியான கொடிகளையோ கொண்டு வரக் கூடாது.

* சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வரக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்