ஆப்நகரம்

60 நிமிடத்தில் 19 கோடி வருவாய் ஈட்டிய திருப்பதி ஏழுமலையான் எப்படி தெரியுமா?

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பதால் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இது சந்திர பரிகார தலமும் கூட என்பதால், இங்கு ஒரு நாள் இரவு தங்கி சுவாமி தரிசனம் செய்வது அதிக பலனை அளிக்கும். பலருக்கும் திருப்பதி ஏழுமலையான் இஷ்ட தெய்வமாக மட்டுமல்ல குலதெய்வமாகவே இருந்து வருகிறார்.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 26 Apr 2023, 4:25 pm
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் 60,000 முதல் 70,000 வரையிலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசனம், திவ்ய தரிசனம் எனப்படும் நடைபாதை தரிசனம், ரூ.300 சிறப்பு தரிசனம், விஐபி தரிசனம், சுப்ரபாத தரிசனம் என பல்வேறு தரிசன முறைகளில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
Samayam Tamil tirupati


வேலை கிடைப்பதில் சிக்கலா? பணியிடத்தில் பிரச்னையா? நல்ல வழி பிறக்க எந்த கடவுளை வணங்க வேண்டும்

தற்போது விடுமுறை காலம் துவங்கி விட்டதால் வழக்கமாக வரும் பக்தர்களின் எண்ணிக்கையை விட மிக அதிகமான பக்தர்கள் திருமலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் பக்தர்களால் திருமலை நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக தினசரி திருமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 80,000 வரை உள்ளது.

ஒவ்வொரு மாதமும் தரிசன டிக்கெட்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. தரிசன டிக்கெட்கள் மற்றும் தங்கும் இடம் ஆகியவற்றை பக்தர்கள் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். வழக்கம் போல் மே மற்றும் ஜூன் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் ஏப்ரல் 25 ம் தேதியான நேற்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

'பொன்னியின் செல்வன் 2'ல் வெளியான ஆதி சங்கரரின் சிவோஹம் பாடலின் சிறப்பு என்ன? இதற்காக தான் மணிரத்னம் பயன்படுத்தியுள்ளாரா?

மொத்தம் 6,45,000 டிக்கெட்களை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டது. இந்த டிக்கெட்கள் அனைத்தும் ஆன்லைன் முன்பதிவு துவங்கிய ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவே விற்று தீர்ந்து விட்டன. ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனை மூலம் மட்டும், ஒரு மணி நேரத்திலேயே ரூ.19.35 கோடி திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருமானம் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்காக காத்திருந்த பல பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

திருப்பதி தரிசனம் : மே, ஜூன் மாதங்களுக்கான சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு

இதனால் ஜூன் மாதம் வரை திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும் என தெரிகிறது. தற்போது இலவச தரிசனம் மூலம் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 30 மணி நேரத்திற்கும் அதிகமாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கிய பக்தர்கள் 5 முதல் 10 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்