ஆப்நகரம்

திருப்பதியில் மே 16 ல் சம்பூர்ண சுந்தரகாண்ட பாராயணம்

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் முழுவதும் தொடர்ந்து உற்சவங்கள் நடைபெற உள்ளன. இதற்கான முழு விபரத்தை சமீபத்தில் தான் தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டது. இந்நிலையில் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடைபெற நாள் மற்றும் நடைபெற உள்ள வைபவங்கள் பற்றிய விபரங்களையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 8 May 2023, 11:48 am
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே 14 ம் தேதி துவங்கி 18 ம் தேதி வரை ஹனுமன் ஜெயந்தி உற்சவங்கள் நடைபெற உள்ளன. இதற்காக திருமலையில் உள்ள தர்மகிரி வேத விக்னன பீடத்தில் மே 16 ம் தேதி அகண்ட சம்பூர்ண சுந்தரகாண்ட பாராயணம் நடைபெற உள்ளது.
Samayam Tamil tirumala


இந்த தனித்துவமான வைபவம் மே 16 ம் தேதி காலை 05.50 மணிக்கு துவங்கி, இரவு 10.30 மணி வரை நடைபெற உள்ளது. ஏறக்குறைய 16 மணி நேரம் சுந்தரகாண்ட பாராயணம் நடைபெற உள்ளது. இந்த பாராயண யாகத்தில் சுமார் 2900 ஸ்லோகங்கள் வேத விற்பன்னர்களால் இடைவிடாது ஓதப்பட உள்ளது.

ஏகதந்த சங்கடஹர சதுர்த்தியின் சிறப்புக்கள் பற்றி தெரியுமா ?

ஸ்ரீ வெங்கடேஷ்வர வேதிக் பல்கலைக்கழகம், தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம், ஸ்ரீ வெங்கடேஷ்வரா வேத உயர் கல்வி மாணவர்கள், வேத விற்பன்னர்கள், தர்மகிரி பண்டிதர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்க உள்ளனர். சுந்தரகாண்ட பாராயணத்துடன் கூடவே சிறப்பு ஹோமமும் நடத்தப்பட உள்ளது. உலக நன்மைக்காக இந்த ஹோமம் நடத்தப்பட உள்ளது.

நீண்ட நாளாக தீராத நோய் தீர வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்க போதும்

பொதுவாக மார்கழி மாத அமாவாசை, மூலம் நட்சத்திர நாளில் அனுமன் அவதரித்தார் என சில புராணங்கள் சொல்கின்றன. சித்திரை மாதத்தில் அனுமன் அவதரித்ததாகவும் சிலர் சொல்வதுண்டு. அதாவது சித்ரா பெளர்ணமிக்கு மறுநாள் அனுமன் அவதரித்ததாக சொல்லப்படுவதுண்டு. இதனால் இரண்டு வெவ்வேறு மாதங்களில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படும் வழக்கம் உள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் 06 ம் தேதி சில பகுதிகளிலும், மே 14 ம் தேதி என சில பகுதிகளிலும் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திருமலையில் மே 14 ம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

அஹோபிலம் பற்றி பலரும் அறியாத 20 சுவாரஸ்ய தகவல்கள்

தற்போது விடுமுறை காலம் என்பதால் திருமலை திருப்பதியில் பக்தர்களின் எண்ணிக்கை வார இறுதி நாட்களில் அதிகரித்தே காணப்படுகிறது. வார நாட்களில் 59,000 முதல் 68,000 வரையிலான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதே சமயம் வார இறுதி நாட்களில் 76,000 க்கும் அதிகமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசனத்திற்கு 12 முதல் 20 மணி நேரமும், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வழியாக வருபவர்கள் 5 முதல் 8 மணி நேரமும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. திவ்ய தரிசனம் நடைபாதையாக சுவாமி தரிசனம் செய்ய வருபவர்களும் காத்திருந்த பிறகே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்