ஆப்நகரம்

திருப்பதியில் மார்ச் 3 ம் தேதி வருடாந்திர தெப்ப உற்சவம் துவக்கம்

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் (tirumala temple) வருடத்தின் அனைத்து நாட்களும் உற்சவம் காணும் கோவில்களில் ஒன்று. இக்கோவிலில் அருள்செய்யும் ஸ்ரீநிவாசப் பெருமாள் நித்ய கல்யாண பெருமாள் என்பதனால் தினமும் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடத்தப்படுகிறது. வருடந்தோறும் நடக்கும் உற்சவங்களில் பிரம்மோற்சவத்திற்கு அடுத்த படியாக ரத சப்தமி, தெப்போற்சவம் (tirumala teppotsavam) உள்ளிட்ட வைபவங்கள் அதிவிசேஷமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் தெப்போற்சவ விழாவை கோலாகலமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் திருமலையில் தீவிரமாக நடந்த வருகிறது.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 25 Feb 2023, 11:34 am
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் சுவாமி புஷ்கரணியில் 5 நாட்கள் தெப்ப உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். இதில் ஒவ்வொரு நாளும் சுவாமி ஒவ்வொரு அலங்காரத்தில் தெப்பத்தில் உலா வந்து காட்சி தருவதை காண ஏராளமான பக்தர்கள் குவிவார்கள்.
Samayam Tamil seva


தெப்ப உற்சவத்தின் முதல் நாளில் மலையப்ப சுவாமி, ஸ்ரீ ராமர் அலங்காரத்தில் சீதா தேவி மற்றும் லட்சுமணருடன் தெப்பத்தில் மிதந்து வந்து காட்சி தருவார். இரண்டாம் நாளில் ஸ்ரீ கிருஷ்ண அலங்காரத்தில் ருக்மணியுடன் வலம் வரும் மலையப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அடுத்த 3 நாட்களும் திரியோதசி என்பதால் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக தெப்பத்தில் உலா வருவார். தெப்ப உற்சவமானது பெளர்ணமி நாளில் நிறைவு பெறும்.

திருப்பதியில் ஆன்லைன் ஸ்ரீவாணி கோட்டா இன்று வெளியீடு

தெப்ப உற்சவத்தின் மூன்றாவது நாளில் முதலில் மூன்று முறையும், பிறகு ஐந்து முறையும் தெப்பத்தில் மலையப்ப சுவாமி, தேவியர்களுடன் வலம் வருவார். இறுதி நாளில் ஏழு முறை தெப்பத்தில் வலம் வந்து காட்சி தருவார். முழு நிலவின் ஒளியில் தெப்பத்தில் ஸ்ரீதேவி - பூதேவியுடன் மலையப்ப சுவாமி உலா வரும் காட்சி கண்கொள்ளக் காட்சியாக இருக்கும்.

நவ கைலாய தலங்கள் பற்றி தெரியுமா? தமிழகத்தில் இவை எங்கு உள்ளன ?

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2023 ம் ஆண்டிற்கான வருடாந்திர தெப்ப உற்சவம் மார்ச் 03 ம் தேதி துவங்கி, மார்ச் 07 ம் தேதி வரையிலான 5 நாட்கள் நடைபெற உள்ளது. தெப்ப உற்சவத்தின் போது தினமும் மாலையில் மலையப்ப சுவாமி பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளுவார். இரவு 7 மணி முதல் 8 மணி வரை சுவாமி புஷ்கரணியில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உலா வந்து காட்சி தருவார்.

தோல்வியே ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? - வழி காட்டுகிறார் சத்குரு

வருடாந்திர தெப்ப உற்சவம் நடைபெற உள்ளதை அடுத்து மார்ச் 03 மற்றும் 04 ஆகிய தேதிகளில் சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், மார்ச் 05, 06 மற்றும் 07 ஆகிய நாட்களில் ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்காரம் உள்ளிட்ட சேவைகளும் ரத்து செய்யப்படுவதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதனால் தெப்ப உற்சவ நாட்களை கணக்கில் கொண்ட பக்தர்கள் தங்களின் தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்