ஆப்நகரம்

திருப்பதியில் ஸ்ரீவாணி டோக்கன் எண்ணிக்கை குறைப்பு

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் (tirupati temple) டிசம்பர் 22 ம் தேதி துவங்கி நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி விழா ஜனவரி 14 ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. ஜனவரி 02 ம் தேதி திறக்கப்பட்ட வைகுண்ட வாசல், ஜனவரி 11 ம் தேதியான இன்றுடன் அடைக்கப்பட உள்ளது. இரா உற்சவங்கள் நிறைவடைந்த பிறகு ஜனவரி 14 ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடையும்.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 11 Jan 2023, 3:20 pm
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு மாற்றப்பட்ட அல்லது தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சேவைகளை மீண்டும் தொடர்வதற்கும், இவி வரம் நாட்களில் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்கும் உரிய ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான(ttd) நிர்வாகம் செய்து வருகிறது.
Samayam Tamil ttd limits srivani as thousand tickets per day
திருப்பதியில் ஸ்ரீவாணி டோக்கன் எண்ணிக்கை குறைப்பு


திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமாணிய மக்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல், சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதில் கவனம் செலுத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக சில மாற்றங்களை கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

ஒரு நாளைக்கு 1000 டிக்கெட் மட்டுமே:

இதனால் ஸ்ரீவாணி டிக்கெட்கள் ஒரு நாளைக்கு 1000 என்ற அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த 1000 டிக்கெட்களில் 750 டிக்கெட்கள் ஆன்லைன் வழியாகவும், மீதமுள்ள 250 டிக்கெட்கள் ஆஃப் லைன் மூலமாகவும் வழங்கப்பட உள்ளன. ஆஃப்லைன் டிக்கெட்கள் திருப்பதி விமான நிலையத்தில் உள்ள கவுன்ட்டரில் வழங்கப்படுகிறது.

போகிப் பண்டிகை 2023 எப்போது? எந்த நேரத்தில், எப்படி கொண்டாட வேண்டும்?

​டிக்கெட் சரிபார்ப்பு :

ஸ்ரீவாணி அறக்கட்டளைக்காக ஏற்கனவே 500 டிக்கெட்கள் ஆன்லைனில் வழங்கப்பட்டு விட்டன. மீதமுள்ள 250 டிக்கெட்கள் ஜனவரி 11 ம் தேதி வழங்கப்படுகின்றன. ஸ்ரீவாணி அறக்கட்டளைதாரர்கள் தங்களுக்கான டிக்கெட்களை மாதவா ரெஸ்ட் ஹவுசில் பெற்றுக் கொள்ளலாம். இந்த டிக்கெட்டில் விமானத்தின் பிஎன்ஆர் எண்ணையும் குறிப்பிட வேண்டும். வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் ஒன்று பகுதியில் பிரேக் தரிசனத்தின் போது டிக்கெட்டுடன் அவர்களின் பயணத்திற்கான பாஸ் சரி பார்க்கப்பட்டு, உண்மையான பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

திருப்பாவை பாசுரம் 27 பாடல் : கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா

​திருப்பாவாடா சேவை :

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த திருப்பாவாடா ஆர்ஜித சேவையும் ஜனவரி 12 முதல் திருப்பதியில் துவங்கப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பாவாடா சேவையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் திருமலையில் உள்ள சிஆர்ஓ கவுன்ட்டரில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்த 25 பக்தர்களுக்கு மட்டும் ஜனவரி 11 ம் தேதி மாலை 5 மணிக்கு டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Koodaravalli 2023 Date : கூடாரவல்லி 2023 எப்போது? அதன் சிறப்புகள் என்ன?

​திருப்பாவாடா சேவை என்றால் என்ன?

திருமலை திருப்பதியில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் திருப்பாவாடா சேவை நடத்தப்படுவது வழக்கம். அதாவது ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை பூஜைக்கு பிறகு, மூலவர் வெங்கடேஷ பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் திருவாபரணங்கள், மலர்கள் உள்ளிட்ட அலங்காரங்கள் கலையப்பட்டு, வேஷ்டி மற்றும் உத்தரீயம் மட்டும் பெருமாளுக்கு அணிவிக்கப்படும். நெற்றியில் திருமண் காப்பு, கஸ்தூரி அணிவிக்கப்படும்.

வழக்கமாக பெருமாள் காட்சி தரும் பெரிய திருநாமத்திற்கு பதிலாக சிறிய அளவிலான நாமத்துடன் காட்சி தருவார். இந்த சேவையின் போது மட்டுமே பெருமாளின் கண்களை நாம் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் பெரிய நாமம் கொண்டு பெருமாளின் பாதி கண்கள் மூடப்பட்டிருக்கும். இந்த உற்சவத்திற்கு திருப்பாவாடா சேவை என்று பெயர். இதுவும் ஆர்ஜித சேவைகளில் ஒன்று.

பெருமாளின் கண்களை மறைக்கும் நாமம்

இந்த சேவையின் போது மூலவருக்கு முன்பு உள்ள மண்டபத்தில் பெரிய அகலமான தங்க டிரேயில் புளியோதரை பரப்பி வைக்கப்பட்டு, அத்துடன் பாயாசம், லட்டு, ஜிலேபி, அப்பம், தேன்குழல் உள்ளிட்ட பல வகையான இனிப்புக்கள் படைக்கப்பட்டு, அதற்கு தேங்காய்கள், மலர்கள், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பொருட்களால் அலங்கரிக்கப்படும். மந்திரங்கள் ஓதப்பட்டு, பூஜைகள் முடிந்த பிறகு, பெருமாளுக்கு மீண்டும் பெரிய நாமம் சாற்றப்பட்டு, வழக்கமான அலங்காரம் செய்யப்படும்.

பெருமாளின் அருட் கண்களில் இருந்து வரும் ஆற்றலை சாதாரண மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதனால் அவரின் கண்கள் பெரிய திருநாமம் கொண்டு மறைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. பெருமாளின் அருட்பார்வை புளியோதரை மீது படும் வகையில் வைக்கப்பட்டு, பிறகு அந்த புளியோதரை அருட் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதில் புளியோதரை ஒரு திரை போல் இருந்து பக்தர்களை காப்பதற்காக பெருமாளின் அருட்சக்திகளை தனக்குள் வாங்கிக் கொள்வதால் புளியோதரையை பாவாடா என்கின்றனர்.

எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்