ஆப்நகரம்

திருப்பதியில் நாளை பிரம்மாண்ட விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஏகாதசி அன்றும் சிறப்பான பூஜைகள், உற்சவங்கள் நடத்தப்படுவது வழக்கம். மார்கழி மற்றும் தை மாதத்தில் வரும் ஏகாதசிகள் அதீத சிறப்பு வாய்ந்தது என்பதால் இந்த நாளில் நடக்கும் உற்சவங்களில் கலந்து கொள்ள பக்தர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் நாளை (பிப்ரவரி 01) திருப்பதியில் பிரம்மாண்டமான விஷ்ணு சகஸ்ரநாம பாராயண நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடத்தப்பட உள்ளது.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 31 Jan 2023, 7:58 pm
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் மார்கழி மாத உற்சவங்கள் முடிந்து, தை மாத உற்சவங்கள் நடைபெற்று வருகிறது. தை மாதத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வான ரத சப்தமி, ஜனவரி 28 ம் தேதி நடந்து முடிந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Samayam Tamil tirupati


ரத சப்தமி நாளில் திருப்பதியில் 80,000 க்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். தொடர்ந்து திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறையாமல் உள்ளதால் கிட்டதட்ட 20 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி 01 ம் தேதியான நாளை ஏகாதசி விழா நடைபெறுகிறது.

அனைத்து ஏகாதசியிலும் இரவு கண் விழிக்க வேண்டுமா? உங்கள் கேள்விகளும் எங்களின் பதில்களும்

தை மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி, பீஷ்ம ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. பிதாமகரான பீஷ்மர், பாண்டவர்களுக்கு விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைச் சொல்லி, அவற்றின் பெருமைகளையும் உணர்த்திய நாள், இந்த நாள். இவற்றையே விஷ்ணு சகஸ்ரநாமமாக நாம் படிக்கிறோம். விஷ்ணு சகஸ்ரநாமம் பாடிய பலனால் பீஷ்மர் மோட்சம் அடைந்தார் என புராணங்கள் கூறுகின்றன.

பீஷ்மர், விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி மோட்சம் அடைந்த நாள் என்பதால் இந்த ஏகாதசி பீஷ்ம ஏகாதசி என அழைக்கப்படுகிறது. பீஷ்ம ஏகாதசியை முன்னிட்டு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை காலை 6 மணி முதல் 9 மணி வரை பிரம்மாண்ட விஷ்ணு சகஸ்ரநாம பாராயண நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

ஜெய ஏகாதசி 2023 : என்ன செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்?

திருமலையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான நாத நீராஞ்சன மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. பிறகு விஷ்ணு சகஸ்ரநாமத்தின் தத்துவம் குறித்தும் பக்தர்களுக்கு விளக்கப்பட உள்ளது. தொடர்ந்து மூன்று முறை விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற உள்ளது. பொதுவாகவே விஷ்ணு சகஸ்ரநாமம் படித்தாலோ, கேட்டாலோ பாவங்கள் தொலைந்து, திருமாலின் திருவருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பார்கள். ஏகாதசி போன்ற நாட்களில் படிக்கப்படும் விஷ்ணு சகஸ்ரநாமத்திற்கு கூடுதல் பலன் உண்டு. இந்த நாளில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்தால் வைகுண்ட பதவி கிடைக்கும்.

தைப்பூசம் ஸ்பெஷல் : முருகனுக்கு உகந்த பிரசாதம் எது தெரியுமா?

அதனால் இந்த விஷ்ணு சகஸ்ரநாம பாராயண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பக்தர்கள் விரைந்து சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள ஏழுமலையான் பக்தர்களுக்காக திருமலை திருப்பதி தேவஸ்தான டிவியில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயண நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்