ஆப்நகரம்

திருப்பதி : ரூ 300 சிறப்பு கட்டண டிக்கெட் பிப்ரவரி 13 ல் வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (ttd) சார்பில் பிப்ரவரி இறுதி வாரம் மற்றும் மாத உற்சவங்கள் மற்றும் பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் முன்பதிவு தொடர்பான விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. பக்தர்களின் சிரமங்களை தவிர்க்கவும், தரிசனத்திற்காக அதிக நேரம் காத்திருப்பதை தவிர்ப்பதற்காகவும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான அறிவிப்புக்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 11 Feb 2023, 10:42 am
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பல கோவில்களில் பிரம்மோற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனந்தாழ்வார் திருஅவதார விழா பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
Samayam Tamil ttd


12 அடி உயர லட்சுமணன் சிலை : உத்திர பிரதேசத்தில் திறப்பு

மார்ச் மாதத்திற்கான உற்சவ டிக்கெட்களையும் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்தின் இறுதி வாரத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு பற்றிய விபரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் படி பிப்ரவரி 22 ம் தேதி துவங்கி பிப்ரவரி 28 வரையிலான நாட்களில் திருமலைக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கான ரூ.300 சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்களுக்கான முன்பதிவு பிப்ரவரி 13 ம் தேதியன்று காலை 9 மணிக்கு துவங்க உள்ளன.

மகா சிவராத்திரி விரதம் எப்போது துவங்கி, எப்போது நிறைவு செய்ய வேண்டும்?

பிப்ரவரி 22 ம் தேதி முதல், பிப்ரவரி 28 ம் தேதி வரை அங்கப்பிரதட்சனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கான டோக்கன்கள் விநியோகம் பற்றிய அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. இந்நிலையில் ரூ.300 சிறப்பு கட்டண ஆன்லைன் முன்பதிவு பற்றிய விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. பக்தர்கள் இதனை பயன்படுத்தி, தங்களின் தரிசன நாள், நேரம் ஆகியவற்றை முடிவு செய்து, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் டிக்கெட் முன்பதிவிற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மொபைல் ஆப் வழியாக பக்தர்கள் தங்களின் தரிசன டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதில் கேட்கப்படும் அடையாள ஆவணங்களை சமர்ப்பித்து, அதற்கான கட்டணத்தையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்தி, தங்களின் தரிசன டிக்கெட்டை உறுதி செய்து கொள்ளலாம்.

ஈஷா மையம் மகா சிவராத்திரி விழா : டிக்கெட் விலை விபரம் மற்றும் முன்பதிவு செய்யும் முறை

தற்போது திருப்பதியில் வழக்கமான எண்ணிக்கையிலேயே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பிப்ரவரி 07 ம் தேதி 65,297 பேரும், பிப்ரவரி 08 ம் தேதி 63,315 பேரும், பிப்ரவரி 09 ம் தேதி 59,090 பேரும் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பிப்ரவரி 06 ம் தேதி வரை தினசரி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 70,000 க்கும் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்