ஆப்நகரம்

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் 16ம் தேதி நடை திறப்பு!

ஆடி மாத பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் 16ம் தேதி மாலை 5.00 க்கு திறக்கப்படுகிறது.

Samayam Tamil 13 Jul 2018, 12:24 pm
ஆடி மாத பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் 16ம் தேதி மாலை 5.00 க்கு திறக்கப்படுகிறது.
Samayam Tamil Sabarimala-Ayyappa-Temple-Opening-Days-2015-2016-Calendar
ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் 16ம் தேதி நடை திறப்பு!


திருவனந்தபுரம் சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர திருவிழாவின் போதும் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜை, வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

அதன்படி ஆடி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை கோவில், வருகிற 16-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அன்று மாலை 5.30 மணியளவில் தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில், மேல்சாந்தி தாமோதரன் நம்பூதிரி நடையை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்துவார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

மறுநாள் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை கணபதி ஹோமம், உஷபூஜை ஆகிய வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. இந்த 5 நாட்களிலும் நெய் அபிஷேகம் நடைபெறும். 21ம் தேதி இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஆடி மாத பூஜைகள் நிறைவடையும்.

பின்னர் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் அடுத்த மாதம் 14-ம் தேதி மாலையில் மீண்டும் நடை திறக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற நிறை புத்தரிசி பூஜை சபரிமலையில் ஆகஸ்டு 15-ந் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்