ஆப்நகரம்

சபரிமலை கோயில் இன்று மாலை நடைதிறப்பு.!

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்க இருக்கிறது.

TNN 16 Oct 2017, 9:47 am
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்க இருக்கிறது.
Samayam Tamil sabarimala ayyapan temple nadai open today
சபரிமலை கோயில் இன்று மாலை நடைதிறப்பு.!


நாளை காலை புதிய மேல்சாந்தி தேர்வு நடக்கிறது. இன்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகளை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு தொடங்கி வைப்பார். உஷபூஜை, உச்சபூஜை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளுடன் மதியம் களபாபிஷேகம், சகஸ்ர கலசம் நடக்கும். எல்லா நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடக்கும்.

நாளை காலை 8:00 மணிக்கு புதிய மேல்சாந்திக்கான குலுக்கல் தேர்வு நடக்கிறது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் நேர்முக தேர்வு நடத்தி தயாரிக்கப்பட்ட பட்டியலில் இருந்து ஒருவர், குலுக்கலில் தேர்வு செய்யப்படுவார். இவர் கார்த்திகை 1 முதல் ஒரு ஆண்டுக்கு மேல்சாந்தி பொறுப்புகளை கவனிப்பார்.

ஐப்பசி மாத பூஜைகளையொட்டி, கேரள முதல்வர் பினராயி விஜயன், நாளை, ஐய்யப்பன் கோயில் சன்னிதானத்துக்கு வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Sabarimala ayyapan temple nadai open today.

அடுத்த செய்தி

டிரெண்டிங்