ஆப்நகரம்

மாதவிடாய் கோவிலுக்கு தீட்டு அதனால் பெண்களுக்கு தடை: சபரிமலை தேவஸ்தானம்

மாதவிடாய் கோவிலுக்கு தீட்டு என்பதால் சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க இயலாது என்று தேவஸ்தானம் உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Samayam Tamil 19 Jul 2018, 2:53 pm
மாதவிடாய் கோவிலுக்கு தீட்டுஎன்பதால் சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க இயலாது என்று தேவஸ்தானம் உச்சநீதிமன்றத்தில்திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Samayam Tamil Stage


கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை கோவிலில்,10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த தடை பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்துவருகிறது. இந்த வழக்கத்திற்கு எதிராகபல தரப்பட்ட அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில்வழக்கு தொடந்தனர்.

முன்னதாக 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்த இவ்வழக்கு , கடந்தஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி, 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில்5 நிதிபதிகள் அடங்கிய அமைர்வுக்கு முன்புஇந்த வழக்கு ஜூலை 18 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, சபரிமலை அய்யப்பன் கோவிலில்வழிபாடு நடத்த ஆண்களைப்போல் பெண்களிக்கும் சம உரிமை உள்ளது. இறைவழிபாடு என்பது ஆண்களைப்போல் பெண்களுக்கும் பொருந்தும். அதை ஒரு சட்டம் சார்ந்துநீங்கள் செயல்படுத்த முடியாது. பெண்கள் வழிபட அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பெண்களுக்கு அனுமதி மறுப்பது குறித்து இதுவரை வலுவான காரணம்சொல்லப்படவில்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.இதற்கு பதிலளித்த தேவஸ்தான நிர்வாகம் மாதவிடாய் காரணத்தால்கோவிலின் புனிதத்தன்மை கெட்டுவிடும். மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் ரத்த வாடை காட்டு விலங்குகளை ஈர்க்கும் . அதனால் விலங்குகள் மனிதர்களை தாக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் பெண்களை அனுமதிக்க முடியாது என்றுவிளக்கம் அளிக்கப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்