ஆப்நகரம்

சபரிமலை பிரசாதத்தின் சுவையைக் கூட்டத் திட்டம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அப்பம், அரவணைப் பாயசம் ஆகியவற்றின் தரம் மற்றும் சுவையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 30 Apr 2018, 4:16 am
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அப்பம், அரவணைப் பாயசம் ஆகியவற்றின் தரம் மற்றும் சுவையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Samayam Tamil untitled-13


கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இங்கு அப்பம் மற்றும் அரவணைப் பாயசம் ஆகிய பிரசாதங்கள் விற்பனை செய்யப்படும்.

இந்தப் பிரசாதங்களின் தரத்திலும், சுவையிலும் மாற்றங்கள் செய்ய, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையத்தின் (CFTRI) துணையை கோவில் நிர்வாகம் நாடியுள்ளது. மத்திய அரசு நிறுவனமான இது கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ளது.

சுத்தமான நடைமுறைகளை பின்பற்றுவது, நாள் கெடாமல் இருக்கவைப்பது போன்ற மாற்றங்கள் செய்யப்படும் என்றும் இது வரும் நவம்பரில் அமலுக்கு வரும் என்றும் தெரிகிறது.

திருப்பதி லட்டு மற்றும் பழநி பஞ்சாமிர்தம் தயாரிப்பிலும் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் மாற்றம் செய்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்