ஆப்நகரம்

சபரிமலை ஐயப்பன் கோவில் நாளை நடை திறப்பு

மகர விலக்கு பூஜைகளுக்கான சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது.ஜனவரி 14 ஆம் தேதி பிரசித்திப் தரிசனம்.

TNN 29 Dec 2017, 1:50 pm
மகர விலக்கு பூஜைகளுக்கான சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது.ஜனவரி 14 ஆம் தேதி பிரசித்திப் தரிசனம்.
Samayam Tamil sabarimala temple opens tomorrow and makara jyothi
சபரிமலை ஐயப்பன் கோவில் நாளை நடை திறப்பு


இந்த ஆண்டு மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 15 ஆம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின.

41 நாள் நீண்ட மண்டலக் காலம் கடந்த 26ம் தேதி நடந்த மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது. அன்று இரவு கோயில் நடை சாத்தப்பட்டது.

3 நாள் இடைவெளிக்கு பின்னர் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 31ம் தேதி முதல் மகர விளக்கு பூஜைகள் தொடங்கும். ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடைபெறும்.

ஜோதி வடிவில் ஐயப்பன் ஐயப்பன் மகர ஜோதியாக பக்தர்களுக்கு வருகிற 14ஆம்தேதி தரிசனம் அளிக்கிறார். இதனை தரிசிக்க பக்தர்கள் இருமுடி கட்டி கோவிலுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்